search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Calf Rescue"

    • ரெட்டியார்பாளையம் போலீஸ் மற்றும் உழவர்கரை நகராட்சி அலுவகலத்திலும் புகார் அளித்தனர்.
    • புரிந்துணர்வு இல்லாததால், கன்று குட்டி மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-விழுப்புரம் சாலை உழவர்கரையில் உள்ள இறைச்சி கடையில் ஒரு கன்று குட்டியை இறைச்சிக்காக வெட்டி கொல்வதற்கு கொண்டு வந்தனர்.

    இதை பார்த்த தனியார் அமைப்பின இறைச்சிக்காக கன்று குட்டிகள், கருவுற்ற கால்நடைகள், நோய்வாய்ப்பட்ட கால்நடைகள், அடிபட்ட மாடுகளை வெட்டக்கூடாது என்பது சட்டம் உள்ளது என எடுத்து கூறினர்.

    ஆனால் இறைச்சி கடை உரிமையாளர் ஏற்கவில்லை. இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸ் மற்றும் உழவர்கரை நகராட்சி அலுவகலத்திலும் புகார் அளித்தனர்.

    இது தொடர்பான புரிந்துணர்வு இல்லாததால், கன்று குட்டி மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டரை அந்த அமைப்பினர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கலெக்டரின் நடவடிக்கையை தொடர்ந்து கன்று குட்டியை ரெட்டியார் பாளையம் போலீசார் மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்பு, உழவர்கரை நகராட்சி நிர்வாகம் இறைச்சிக்காக கொல்லப்பட இருந்த கன்று குட்டியை மீட்டு சென்றது.

    • மேய்ச்சலுக்காக கட்டி வைத்தபோது விபரீதம்
    • தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனக்கு சொந்தமாக பசு மற்றும் கன்றுகுட்டியை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அவரது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக மாடுகளை கட்டி வைத்தார்.

    திடீரென கன்று மாயமானது. பின்னர் அருகே இருந்த 70 அடி ஆழமுடைய கிணற்றில் சத்தம் வந்தது. அருகில் சென்று பார்த்த போது கன்று நீரில் தத்தளித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக அருகே இருந்த ஒடுகத்தூர் தீயணப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    விரைந்து வந்த சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி, கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.

    ×