search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    70 அடி ஆழ கிணற்றில் விழுந்த கன்று உயிருடன் மீட்பு
    X

    70 அடி ஆழ கிணற்றில் விழுந்த கன்று உயிருடன் மீட்பு

    • மேய்ச்சலுக்காக கட்டி வைத்தபோது விபரீதம்
    • தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தனக்கு சொந்தமாக பசு மற்றும் கன்றுகுட்டியை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அவரது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக மாடுகளை கட்டி வைத்தார்.

    திடீரென கன்று மாயமானது. பின்னர் அருகே இருந்த 70 அடி ஆழமுடைய கிணற்றில் சத்தம் வந்தது. அருகில் சென்று பார்த்த போது கன்று நீரில் தத்தளித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக அருகே இருந்த ஒடுகத்தூர் தீயணப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    விரைந்து வந்த சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி, கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.

    Next Story
    ×