என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பதி விரைவு ரெயில் காட்பாடியுடன் நிறுத்தம்
- தெற்கு ெரயில்வே அறிக்கை
- காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்
வேலூர்:
பராமரிப்புப் பணி காரணமாக விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயில் இன்று முதல் நவ.12-ந் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது.
இது குறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை விழுப்புரத்திலிருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரெயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
மறு மார்க்கமாக இந்த ரெயில் (எண்: 16853) வழக்கமாக திருப்பதிக்கு பதிலாக மாலை 4.35 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்.
10-ந் தேதி ராமேஸ்வரத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு குஜராத் மாநிலம் ஓகா செல்லும் விரைவு ரயில் (எண்: 16733) ஜோலார்பேட்டை, மேல்பாக்கம், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.
10-ந் தேதி மதுரையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு ஓகா செல்லும் விரைவு ரயில் (எண்: 09519) காட்பாடி, பகலா, தர்மா வரம், கூடி வழியாக இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






