என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பதி ரெயில்"
- திருப்பதி ரெயில் நிலையத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
- நகை, பணம், செல்போன் ஆகியவற்றை இழந்த பயணிகள் திருப்பதி ரெயில்வே போலீசில் புகார் அளித்து வந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், கார், வேன், ரெயில் மூலம் வருகின்றனர்.
இதனால் திருப்பதி ரெயில் நிலையத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி கும்பல் பயணிகளிடம் பணம், செல்போன் நகைகளை திருடி செல்கின்றனர்.
நகை, பணம், செல்போன் ஆகியவற்றை இழந்த பயணிகள் திருப்பதி ரெயில்வே போலீசில் புகார் அளித்து வந்தனர்.
இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் திருப்பதி ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த மீனா (வயது 23), ராணி (29),அஞ்சலி (25) என தெரிய வந்தது.மேலும் போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ரூ.34 ஆயிரம் விலை உயர்ந்த 3 செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்த பணம், செல்போன்களை பறிமுதல் செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் மீது திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- ரெயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 15-ந்தேதி வரை நடைபெறவுள்ளன.
- 15-ந்தேதி வரை விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரெயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில் வழித்தடங்களில் பராமரிப்புப் பணிகள் வருகிற 15-ந்தேதி வரை நடைபெறவுள்ளன. இதனால், 15-ந்தேதி வரை திருப்பதியில் இருந்து காலை 6.50 மணிக்கு காட்பாடி புறப்படும் பயணிகள் ரெயில் (எண்: 07659), மறுமாா்க்கமாக காட்பாடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு திருப்பதி செல்லும் ரெயில் (எண்: 07582) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் காட்பாடியில் இருந்து காலை 9.50 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு சிறப்பு விரைவு ரெயிலும் (எண்: 06417), மறுமாா்க்கமாக ஜோலார்பேட்டையில் இருந்து பகல் 12.45 மணிக்கு காட்பாடி செல்லும் ரெயிலும் (எண்: 06418) ரத்து செய்யப்படுகிறது.
15-ந்தேதி வரை விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரெயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
மறுமாா்க்கமாக இந்த ரெயில் (எண்:16853) திருப்பதிக்கு பதிலாக மாலை 4.35 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்பட்டு வழக்கமான அட்டவணையின்படி விழுப்புரம் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தெற்கு ெரயில்வே அறிக்கை
- காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்
வேலூர்:
பராமரிப்புப் பணி காரணமாக விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயில் இன்று முதல் நவ.12-ந் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது.
இது குறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை விழுப்புரத்திலிருந்து காலை 5.35 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரெயில் (எண்: 16854) காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
மறு மார்க்கமாக இந்த ரெயில் (எண்: 16853) வழக்கமாக திருப்பதிக்கு பதிலாக மாலை 4.35 மணிக்கு காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்.
10-ந் தேதி ராமேஸ்வரத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு குஜராத் மாநிலம் ஓகா செல்லும் விரைவு ரயில் (எண்: 16733) ஜோலார்பேட்டை, மேல்பாக்கம், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.
10-ந் தேதி மதுரையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு ஓகா செல்லும் விரைவு ரயில் (எண்: 09519) காட்பாடி, பகலா, தர்மா வரம், கூடி வழியாக இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






