search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 513 பேர் பங்கேற்பு
    X

    சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 513 பேர் பங்கேற்பு

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது

    வேலூர்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம், சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவ தற்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் மாநிலம் முழுவதும் நடந்தது.

    இதில் தாலுகா ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட மொத்தம் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இந்த போட்டித்தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் தற்போது காவல்துறை பணியில் உள்ளவர்களும் இப்போட்டித் தேர்வில் 20 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ங்களில் தேர்வில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு உடற்தகுதி தேர்வு இன்று காலை வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. அதிகாலை முதலே தேர்வாளர்கள் நீண்ட வரிசையில் கத்திருந்தனர்.

    காலை 6 மணியளவில் அவர்களை தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர். இதில் மொத்தம் 513 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

    முதல் நாளான இன்று உயரம், மர்பளவு, 1500 ஓட்டமும் நடந்தது. இந்த உடற்தகுதி தேர்வை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, எஸ்.பி. மணிவண்னண் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் வெற்றி பெற்றவர்க ளுக்கு நாளை கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், 100, 400 மீட்டர் ஓட்டம் நடந்தது. இந்த தேர்வை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் எஸ்.பி. மணிவண்ணன் மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி.கள், டி.எஸ்.பி.கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் அமைச்சுப்பணி யாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

    மேலும் வேலூர் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடி படை ஐ.ஜி.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தேர்வு நடைபெறும் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ப்பட்டு கண்கா ணிக்கப்பட்டது.

    Next Story
    ×