search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆந்திராவில் இருந்து லாரியில் 100 கிலோ கஞ்சா கடத்தல்
    X

    ஆந்திராவில் இருந்து லாரியில் 100 கிலோ கஞ்சா கடத்தல்

    • காட்பாடியில் 2 பேர் கைது
    • போலீசார் வாகன தணிக்கையில் சிக்கினர்

    வேலூர்:

    ஆந்திராவில இருந்து ரெயில் மற்றும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தனிப்படைகள் அமைத்து போலீசார் சோதனை நடத்தியும், அவர்கள் ஒரு சில நேரங்களில் தப்பிச் செல்கின்றனர்.

    அதன்படி வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், காட்பாடி ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக -ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டி யான்பேட்டை சோதனை சாவடி அருகில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் சந்தேகக்கும் வகையில் பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்ட பண்டல்கள் இருந்தன. அதனைப் பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிலோ கஞ்சா இருந்தது.

    லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 30), திருச்சியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (25) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதும் தெரிந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்ட லங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×