search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளைகளுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
    X

    காளைகளுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

    • எருது விடும் விழாவில் பல பரிசுகளை வென்றுள்ளது
    • 3 மாடுகளையும் அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சாலப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அழகுராஜா, அழகு ராணி, ஓம் சக்தி, என்ற பெயரில் 3 மாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த மாடுகள் வேலூர், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் எருது விடும் திருவிழாவில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளது.

    இதில் பெருமாள் வளர்த்து வரும் அழகு ராணி என்ற மாட்டிற்கு 3-ம் ஆண்டு பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடினர்.

    இதனையொட்டி பெருமாள் 3 மாடுகளையும் அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்து ஊர் நடுவே கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

    பின்னர் மாடுகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாட்டின் உரிமையாளர்களுக்கும், மாடுகளுக்கும் சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    Next Story
    ×