search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electrical accident"

    • மின்சார சுவிட்சை கழற்றியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த உப்பரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சம்பத் (வயது 45), விவசாயி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த பாபு என்பவரது விவசாய நிலத்தில் நேற்று ஆழ்துளை கிணறுக்கான மின்சார சுவிட்சை கழற்றியுள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுக்குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது
    • மழைக்காலங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

    சேத்துப்பட்டு,

    சேத்துப்பட்டு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ரவிச் சந்திரபாபு தலைமையில் சேத் துப்பட்டு உதவி செயற்பொறி யாளர் பக்தவச்சலு, உதவி மின்பொறியாளர்கள் மோகன், ரவிக்குமார், சரவணன், வெங்க டேசன் மற்றும் மின் மி ஊழியர் கள் சேத்துப்பட்டு, நெடுங்கு ணம், உலகம்பட்டு, கெங்கைசூ டாமணி, கொழப்பலூர், கெங் காபுரம், இந்திரவனம், ஆவணி யாபுரம், நாராயணமங்கலம் ஆகிய கிராமங்களில் பொதுமக் கள் மழைக்காலங்களில் மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து மின்விபத்தினை தடுக்க வேண்டி ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து துண்டு பிரசு ரங்களை வழங்கினர்.

    • மின்கம்பி அறுந்து கொட்டகை மீது விழுந்தது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அப்புகல் கிராமம், செட்டியார் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 40), விவசாயி. இவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார்.

    பசு மாட்டை கட்டுவதற்காக இரும்பு தகர சீட்டை கொண்டு கொட்ட கை அமைத்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு அணைக்கட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அப்போது வெங்கடேசன் பாட்டை கொட்டகைக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கொட்டகையின் மேல் சென்ற மின்சார கம்பி அறுந்து மாட்டு கொட்டகையின் மீது விழுந்தது. இன்று காலை வழக்கம் போல் வெங்கடேசன் பால் கறக்க கொட்டகைக்கு சென்றார். அப்போது பசு மாடு இறந்த கிடந்தது. அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் கொட்ட கையில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பியை பிடித்தார்.

    அப்போது வெங்க டேசனையும் மின்சாரம் தாக்கியது.

    இது தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை, அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சை க்காக அணை க்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரத்தை வெட்டிக் கொண்டிருந்தபோது பரிதாபம்
    • செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த அரசாணை பாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 27). சிப்காட்டில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு வீட்டின் அருகே சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தில் மரங்கள் வளர்ந்திருந்தது. அதனை வெட்டுவதற்காக நேற்று முன்தினம் நிலத்திற்கு சென்றார். மரத்தை வெட்டிக் கொண்டிருந்தபோது அந்த மரம் அருகே இருந்த மின்சார கம்பி மீது விழுந்தது.

    திடீரென கோபாலகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காப்பாற்ற முயன்ற தாய் படுகாயம்
    • கம்பத்திற்கு உதவியாக பொருத்தப்பட்டிருந்த ஸ்டே கம்பியை பிடித்தபோது பரிதாபம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் அருகே உள்ள அல்லிவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 50), விவசாயி. இவரது மனைவி செந்தாமரை (43). தம்பதியினரின் மகன்கள் அஜித்குமார் (24), விஜயகுமார் (22).

    அஜித்குமார் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். விஜயகுமார் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    அஜித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். விடுமுறை முடிந்து நேற்று பணிக்கு திரும்பி செல்ல தயாரானார்.

    இந்த நிலையில் அவரது தம்பி விஜயகுமார் மாட்டு கொட்டகையில் இருந்த சானியை நிலத்திற்கு எடுத்துச் சென்றார். அப்போது அங்கிருந்து மின்கம்பத்திற்கு உதவியாக பொருத்தப்பட்டிருந்த ஸ்டே கம்பியை பிடித்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததால், விஜயகுமார் துடித்தார். இதனைப் பார்த்து அவரது தாய் செந்தாமரை ஓடி சென்று, மகனைக் காப்பாற்ற கீழே தள்ளிவிட்டார்.

    அப்போது செந்தாமரை மீது மின்சாரம் பாய்ந்தது. படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். செந்தாமரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏர் உழவு பணியில் ஈடுபட்டபோது பரிதாபம்
    • தப்பி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக விவசாயி உயிர் தப்பினார்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நெமந்தகார தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கு பாதிரி கிராமத்தில் 4 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.

    இதில் நெல் பயிரிடு வதற்காக பாதிரி கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன் என்பவர் கூலிக்கு 2 மாடுகளை வைத்து ஏர் உழவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது 2 மாடுகள் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    இதில் 2 மாடுகளும் சம்பவம் இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இதனைக் கண்ட சின்னப் பையன் அங்கிருந்து தப்பி ஓடியதால் அதிர்ஷ்ட வசமாக அவர் உயிர் தப்பினார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மாடுகளை பார்த்து சென்றனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழாவில் பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    புதுப்பாளையம்:

    செங்கம் அடுத்த பெரிய தள்ளபாடியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 18).

    இவர் முன்னூர்மங்கலம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அருகே உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்தார்.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி அப்பகுதியில் வீட்டின் அருகே நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்தார். நேற்று மாலை விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக மைக் செட் ஒலி, ஒளி அமைக்கப்பட்டு இருந்தது.

    மதன்குமார் மைக்கை கையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த மைக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. இதில் மதன் குமார் தூக்கி வீசப்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

    உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மதன் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து புதுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதன்குமாரின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஷா என்பவரின் மகன் அசார் (வயது16).

    இவர் அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைபள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் அசார் குடும்பத்தினருடன் தும்பேரி அருகே நாதிகுப்பம் பகுதியில் நடைபெற்ற சிறுவனின் சித்தப்பா சையத் பாஷா என்பவரின் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்றார்.

    திருமண வறவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற தனியார் மண்டபத்தில் போடப்பட்டிருந்த பந்தல் அருகே சிறுவன் விளையாடிகொண்டிருந்த போது அங்குள்ள இரும்பு கம்பத்தை பிடித்துள்ளார்.

    அப்போது இரும்பு கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து அசார் மயங்கி கீழே விழுந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பலூர் போலீஸ் மாணவன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேப்பமரத்தில் தழைபறித்த போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் கண் ணப்பன் விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 55). இவர் நேற்று வீட் டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தழைபறிக்க சென்றுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சா ரம் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச் செல்வியின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக ஆற்காடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் இணைப்பு பெட்டியை தொட்டபோத விபரீதம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடி யாத்ததம் அடுத்த அக்ராவ ரம் ஊராட்சி ஏரிப்பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந் தன். இவரது மனைவி சங் கீதா. விவசாயக் கூலித்தொழி லாளிகள்.

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஆதித்யன் (வயது 11), குடியாத்தம் நெல் லூர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே குடிநீர் தொட்டி உள்ளது. அதன் அருகே சிறுவன் விளையா டிக் கொண்டிருந்தான்.

    அப் போது குடிநீர் தொட்டிக்கு செல்லும் மின்சார இணைப்பு பெட்டியில் எதிர்பாராதவித மாக ஆதித்தன் கை வைத்ததாக கூறப்படுகிறது.

    இதில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தான். உடனடி யாக பெற்றோர் மற்றும் உறவி னர்கள் மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு சிகிச் சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சக ஊழியர்கள் மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா சின்ன ஏழாச்சேரி பெரியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30) இவர் அதே பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.

    சுரேஷ் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்குவாரிக்கு வேலைக்கு சென்றார்.

    அப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டரை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெனரேட்டிலிருந்து வந்த மின்சாரம் சுரேஷ் மீது தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    உடனிருந்த சக ஊழியர்கள் அவரைக் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுரேசின் தந்தை சீனிவாசன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • வீட்டில் ஒயரிங் வேலை செய்தபோது பரிதாபம்

    வேலூர்:

    பெங்களூரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 56), எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் சத்துவாச்சாரியில் உள்ள தங்கை வீட்டிற்கு வந்தார்.

    மூர்த்தியின் தங்கை வீடு பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. அப்போது மூர்த்தி வீட்டில் ஒயரிங் வேலை செய்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    படுகாயம் அடைந்த அவரை மீட்டு, 108 ஆம்பூலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×