search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
    X

    மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

    • சக ஊழியர்கள் மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா சின்ன ஏழாச்சேரி பெரியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30) இவர் அதே பகுதியில் உள்ள கல் குவாரி ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.

    சுரேஷ் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்குவாரிக்கு வேலைக்கு சென்றார்.

    அப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டரை ஆன் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெனரேட்டிலிருந்து வந்த மின்சாரம் சுரேஷ் மீது தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    உடனிருந்த சக ஊழியர்கள் அவரைக் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுரேசின் தந்தை சீனிவாசன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×