என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் விபத்துகளை தவிர்க்க, மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் - மேற்பார்வை பொறியாளர் அறிவுரை
- வீடுகளில் ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்த மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.
- தற்போது புதிய மின் இணைப்புகளில் மின் கசிவு தடுப்பு சாதனம் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வீடுகளில் ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்த மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும். வீட்டு வயரிங் பணிகளை உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்ய வேண்டும். நுகர்வோர் இருப்பிடங்களில் மின் விபத்துகளை தவிர்க்க மின்கசிவு தடுப்பு சாதனத்தை பொருத்த வேண்டும். தற்போது புதிய மின் இணைப்புகளில் மின் கசிவு தடுப்பு சாதனம் பொருத்துவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
கட்டுமான பணி மற்றும் வீடுகளில் வெள்ளை அடிக்கும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஏணிகளை கவனமாக கையாள வேண்டும். விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும். மின்வாரிய ஊழியர்கள் மூலம் மின்தடைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மின் விபத்துகளை தவிர்க்க மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.