search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு
    X

    மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • வீட்டில் ஒயரிங் வேலை செய்தபோது பரிதாபம்

    வேலூர்:

    பெங்களூரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 56), எலக்ட்ரீசியன். இவர் நேற்று முன்தினம் சத்துவாச்சாரியில் உள்ள தங்கை வீட்டிற்கு வந்தார்.

    மூர்த்தியின் தங்கை வீடு பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. அப்போது மூர்த்தி வீட்டில் ஒயரிங் வேலை செய்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    படுகாயம் அடைந்த அவரை மீட்டு, 108 ஆம்பூலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×