search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
    X

    மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு

    • கோவில் விழாவுக்கு தோரணம் கட்டியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் குச்சனூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவன் (வயது 30) பெயிண்டராக உள்ளார்.

    குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பால விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒரு கோவிலில் விழாவிற்காக தேவன் நண்பர்களுடன் தோரணம் கட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மின்விளக்குகள் இருந்த ஒயரை எதிர்பாராத விதமாக தேவன் தொட்டு உள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி எரியப்பட்டார்.

    இதில் மின்சாரம் தாக்கியதில் தேவன் சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி தேவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×