search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி போக்குவரத்து கழக ஊழியர் பலி
    X

    மின்சாரம் தாக்கி போக்குவரத்து கழக ஊழியர் பலி

    • ஆடுகளுக்கு தழை பறித்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங் குப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 47). இவர் திருப்பத்தூர் அரசு பணிமனையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் இவர் வளர்த்து வரும் ஆடுகளுக்கு உணவளிக்க வீட்டின் அருகே இருந்த மரத்தில் இரும்பு தொரட்டி மூலம் தழைகளை பறித்தார். அப்போது கண்ணதாசன் கையில் பிடித்திருந்த தொரட்டி வீட்டின் அருகே சென்ற மின் கம்பி மீது விழுந்தது. அப்போது திடீரென அவர் மீது

    மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை, அவரது தாயார் ரத் தினம்தூக்கச் சென்றுள்ளார். அப்போது அவரையும் மின் சாரம் தாக்கி உள்ளது.

    இதை பார்த்த பொதுமக் கள் கண்ணதாசனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்ற னர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கண்ணதாசன் ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்த னர். படுகாயம் அடைந்த அவ ரது தாயாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த தும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங் கையர்கரசி மற்றும் போலீ சார் சென்று பிணத்தை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×