என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tar road work"
- மேயர் சுஜாதா ஆய்வு
- முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி 21-வது வார்டு பூங்கா நகர் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தார் சாலை அமைக்கும் பணியை மேயர் சுஜாதா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குறிப்பிட்ட உயரத்தில் தரமாக சாலை அமைக்கப்படுகிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இ.பி நகர், ஸ்ரீராம் நகர் நேதாஜி போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் சர்க்கரை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- ரூ.38 லட்சம் 43ஆயிரம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
- பூமி பூஜையை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி மடுகரை ரோட்டில் இருந்து நத்தமேடு வரை சுமார் 1½ கிலோ மீட்டரில் பழைய மண் பாதையில் மீது ரூ.38 லட்சம் 43ஆயிரம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதற்கான பூமி பூஜையை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதில் பொதுப்பணித் துறை நீர்ப்பாசன பிரிவு கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் ஜெயராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- அன்னதானப்பட்டியில் தார்சாலை அமைப்பதற்காக பணிகள் தொடங்கின.
- கிடப்பில் போடப்பட்ட முழுமையடையாத தார் சாலையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் - சங்ககிரி மெயின் ரோடு, அன்னதானப்பட்டியில் தார்சாலை அமைப்பதற்காக பணிகள் தொடங்கின. சாலையில் கற்கள் கொட்டப்பட்டு சரிசெய்யப்பட்டது. ஆனால் அதன்பின் பணிகள் நடக்கவில்லை. கிடப்பில் போடப்பட்ட முழுமையடையாத தார் சாலையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து மிகுந்த காலை மற்றும் மாலை வேளைகளில் எதிரில் உள்ள வாகனங்கள் தெரியாத அளவுக்கு புழுதியை கிளப்புகிறது. தை பிறந்தும் விலகாத பனி படர்ந்தது போல புழுதி பறப்பதால் சாலையில் செல்வோரும், அக்கம்பக்கம் கடைகள் வைத்திருப்பவர்களும் கடுமையாக பாதிக்கபப்டுகிறார்கள்.
புழுதியால் நோயாளிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யவேண்டும் என்கின்றனர் மக்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்