search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரதட்சணை கேட்டு கொடுமை
    X

    வரதட்சணை கேட்டு கொடுமை

    • கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த முடினாம்பட்டை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 23).. இவருக்கும் கீழ்மொணவுரை சேர்ந்த அருண்குமார் (33) என்றவர்க்கும் திருமணம் நடந்தது திருமணத்தின்போது 12 சவரன் நகையை ஐஸ்வர்யாவின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர்.

    இந்த நிலையில் அருண்குமார் மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு ஐஸ்வர்யாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அருண்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதை ஐஸ்வர்யா தட்டி கேட்டுள்ளார். அப்போழ அருண்குமார் மற்றும் அவரது தந்தை அசோகன் (60), தாய் வசந்தா (50), அகிலா (32), ஆஷா (22) ஆகியோர் ஐஸ்வர்யாவை ஆபாசமாக திட்டி உள்ளனர்.

    இது குறித்து ஐஸ்வர்யா வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×