என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் கலெக்டர் அலுவலகம்"

    • நீண்ட நாட்களாக வழிப்பாதை கேட்டு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
    • கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    பென்னாத்தூர் அருகே உள்ள அல்லி வரும் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70) இவர் இன்று காலை குறை தீர்வு கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்கம் முன்பு வந்தார். திடீரென அவர் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் எடுத்து தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

    அல்லிவரம் கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுதர வேண்டும் என கூறினார்.

    இதே போல குடியாத்தம் அருகே உள்ள மோடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் என்ற முதியவர் இன்று காலை கலெக்டர் அலுவலக வாசலில் தனது உடலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.

    மோடிக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு வழிபாதை இல்லாமல் அவதிப்படுகிறேன். நீண்ட நாட்களாக வழிப்பாதை கேட்டு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.

    ஒரே நாளில் 2 முதியவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தைகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
    • பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உதவி கலெக்டர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

    கே.வி.குப்பம் அடுத்த மகமது புரத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், முரளி, உத்திரகுமார்.

    இவர்களது 3 குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அவர்கள் திடீரென தயாராக கொண்டு வந்த மண் எண்ணெய் உடல்களில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதில் குழந்தைகளுக்கு உடல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.

    இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தைகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

    அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    கிராம குளத்திற்கும் எங்களது நிலத்திற்கு செல்ல பொது வழி உள்ளது. பொது வழியை முருகம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து மண்ணை கொட்டி உள்ளார். விவசாய நிலத்திற்கு செல்லும் போது ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேலும் வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து தாக்க முயற்சி செய்கிறார்.

    இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

    • மின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த மின் உபகரணங்கள் முழுவதும் தீப்பற்றியது.
    • விபத்தில் காயம் அடைந்த ஊழியர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மின் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை ஊழியர் சந்தோஷ் என்பவர் எலக்ட்ரிக் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது ஒயர்கள் திடீரென உரசி தீப்பற்றியது. இதனால் மின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த மின் உபகரணங்கள் முழுவதும் தீப்பற்றியது.

    சந்தோஷ் மீதும் தீ பற்றியது. அந்த நேரத்தில் பயங்கர சத்தத்துடன் கலெக்டர் அலுவலகம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

    மின் ஊழியர் மீது பற்றி எரிந்த தீயை சக ஊழியர்கள் அனைத்தனர். பயங்கர சத்தத்துடன் மின் உபகரணங்கள் தீப்பற்றியதால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர்.

    மேலும் அந்த நேரத்தில் பி பிளாக் கட்டிடத்தில் லிப்டில் 9 பேர் கீழே வந்து கொண்டிருந்தனர்.

    மின்தடையால் லிப்ட் பாதியிலேயே நின்றது. இதனால் லிப்டில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் தவித்தனர்.

    இந்த விபத்தில் காயம் அடைந்த ஊழியர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லிப்டில் சிக்கி தவித்த 9 பேரை அங்கிருந்த ஊழியர்கள் லாவகமாக மீட்டனர்.

    இதனால் கலெக்டர் அலுவலக அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • குறைதீர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கு முன்பு தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து 8 பேரும் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
    • இதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஒரே நேரத்தில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி பேஸ் 2 பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 60) வழக்கறிஞராக உள்ளார்.

    இவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் குடும்பத்தினர் 8 பேர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். குறைதீர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கு முன்பு தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து 8 பேரும் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஒரே நேரத்தில் 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    எங்களுக்கு சொந்தமான நிலம் வேலூர் காந்தி ரோட்டில் உள்ளது. இந்த நிலத்திற்கு செல்ல விடாமல் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×