search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Removal of encroachment"

    • பெண் தற்கொலை மிரட்டல்-பரபரப்பு
    • அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை

    வேலூர்:

    வேலூர், சத்துவாச்சாரி, வள்ளலார் உள்ளிட்ட பகுதிகளில் சாலை யோரங்களில் கடைகள் அமைத்து போக்கு வரத்துக்கு இடையூராக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    இதையடுத்து மாநகராட்சி 3-வது மண்டல கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன் 2-வது மண்டல கட்டிட ஆய்வாளர் நிர்மலா தேவி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் வள்ளலார் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்ப ட்டிருந்த கடைகளை அகற்ற முயன்றனர்.

    அப்போது கடையின் பெண் உரிமையாளர் கடைகளை அகற்றினால் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொள்வதாக அதிகாரிகளை மிரட்டினார்.

    இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டல் விடுத்த பெண்ணிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கடைகளை அப்புறப்ப டுத்தினர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது
    • பல்வேறு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் கட்டாய கடமைகளான கிராம சாலைகள், பாலங்கள், தரைப்பாலங்களை பழுதுபார்த்தல், குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்தல், கழிவு நீர் கால்வாய் அமைத்து கழிவு நீரை அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பொது கழிப்பிட வசதி ஆகிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    மேலும் கிராம ஊராட்சிகளின் விருப்புரிமை பணிகளான மரங்களை நட்டு பாதுகாத்தல், குடியிருப்பு இல்லாத பொது இடங்களில் தெரு விளக்குகள் அமைத்தல், சந்தைகளை ஏற்படுத்தி பராமரித்தல், விழாக்கள் மற்றும் பொருட்காட்சிகளை நெறிப்படுத்துதல், விளையாட்டு திடல்கள், பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    தேசிய ஊராட்சி விருது 2024-ம் ஆண்டிற்கு இணையதள தரவுகள் மூலம் விண்ணப்பிக்கவும், விவரங்களை பதிவேற்றம் செய்யவும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இணைய வழி மூலம் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, வரி அல்லாத வரி, வர்த்தக உரிமம் ஆகிய நடவடிக்கை களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    கிராம ஊராட்சிகளில் தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஊராட்சி சொத்துக்களை கண்கா ணித்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்க ளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் (பொ) சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து நெரிசல்
    • வேலூர் காகிதப்பட்டறையில் பரபரப்பு

    வேலூர்

    வேலூர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முதல் காகிதபட்டறை டான்சி தொழிற்சாலை வரை மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 32 வீடுகள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை அவர்களே அகற்ற, வீடு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    கால அவகாசம் கொடுத்த பிறகும் கூட அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.

    இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

    இதன் காரணமாக சத்துவாச்சாரியில் இருந்து ஆற்காடு ரோட்டில் வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். அந்த வாகனங்கள் கிரீன் சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன.

    அப்போது வாகனங்கள் ஒரே சர்வீஸ் சாலையில் எதிரும், புதிருமாக சென்றதால் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்பட்டது.

    சர்வீஸ் சாலையை கடந்து செல்ல சுமார் அரை மணி நேரம் ஆனதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • மிரட்டல் விடுத்தவர்கள் கைது
    • தீக்குளிப்போம் என மிரட்டல் விடுத்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட கழனிப்பாக்கம் ஊராட்சி, கந்தனேரி கூட்ரோட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடம் உள்ளது.

    கந்தனேரி கூட்ரோட்டில் இருந்து அணைக்கட்டு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள இந்த புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் மற்றும் கடைகள் கட்டி உள்ளனர்.

    இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சா லைத்துறையினர் ஏற்கனவே, வீடுகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இருப்பினும் ஆக்கிர மிப்புகளை அவர்கள் அகற்றி தரவில்லை.

    இதனையடுத்து இன்று காலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட ப்பொறியாளர் பிரகாஷ், அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, பள்ளி கொண்டா இன்ஸ்பெக்டர் கருணா கரன், கிராம நிர்வாக அலுவலர் சாட்லுதுரை உள்ளிட்ட அதிகாரிகள் கந்தனேரி கூட்ரோட்டுக்கு பொக்க லைன் எந்திரத்துடன் வந்தனர்.

    மேலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் கடைகளை பொக்லைன் மூலம் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பாளர்கள் மண்ணெ ன்ணெய் மற்றும் பெட்ரோல் கேனுடன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தீக்குளிப்போம்் என மிரட்டல் விடுத்தனர்.

    அவர்களை போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். இருப்பினும் போராட்ட க்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றன தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • நகர மன்ற கூட்டத்தில் தகவல்
    • ரூ.1 கோடி மதிப்பீட்டில் 13 வாகனங்கள் வாங்கப்பட உள்ளன

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

    நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், மேலாளர் சுகந்தி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    கவுன்சிலர்கள் அரசு, நவீன் சங்கர், தண்டபாணி, ஆட்டோ மோகன் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன்.

    கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு கெங்கையம்மன் தேர் மற்றும் சிரசு ஊர்வலம் வரும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சாலைகள் சீரமைக்கப்பட்டும், புதிதாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், நடமாடும் கழிப்பிடங்கள், கூடுதலாக மின்விளக்கு வசதி ஆகியவை ஏற்படுத்தப்படும்.

    சொத்துவரி, குழாய்வரி உள்ளிட்ட வரி வகைகளை பெயர் மாற்றம் செய்ய 6 வார்டுகளுக்கு ஒரு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதில் சம்ப ந்தப்பட்ட பொதுமக்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெயர்மாற்றம் செய்து கொள்ளலாம், குடியாத்தம் பகுதியில் குப்பைகளை அகற்ற சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 13 வாகனங்கள் வாங்கப்பட உள்ளன.

    விரைவில் இந்த வாகனங்கள் வரும் அப்போது குடியாத்தம் தூய்மையான நகராக மாறும் குப்பைகள் உடனு க்குடன் அகற்றப்படும், கோழி கழிவு களை கொட்டு பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    பேனர் வைப்பது குறித்து அதிகாரி களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க ப்படும், சுங்கச்சாவ டிகளில் கட்டண விலக்கு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி உயர் அதிகாரி களுக்கு அனுப்பப்படும் என்றார்.

    இக்கூட்ட த்தில் அடிப்படை வசதிகளான வடிகால் சீர்படுத்துதல், சுகாதார வசதி ஏற்படுத்துதல், சிறுபாலங்கள் அமைத்தல் சிறு மின்விசை பம்புகள் சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் தேர் திருவிழா முன்னிட்டு நடவடிக்கை
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தோசித பெரு மாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காலை மாலை நேரங்களில் நான்கு மாட வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இந்தநிலையில் சுவாமி வீதிஉலா செல்வதற்கு ஏதுவாக பஜார் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    நகராட் சியின் நகரமைப்பு ஆய்வாளர் கவிதா, துப்புரவு ஆய்வாளர் வடிவேல் மேற்பார்வையில் வருவாய்த்துறை உதவி யுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மண்டல துணை தாசில்தார் அருட்செல்வம், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் நடராஜன் உடனிருந்தனர்.

    • நோட்டீஸ் வழங்கியும் அகற்றாததால் நடவடிக்கை
    • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் வகையில் ஊராட்சி மன்ற சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக ஏலகிரி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.

    இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். படகு சவாரி, இயற்கை பூங்கா, சாகச விளையாட்டுகள், பறவைகள் சரணாலயம், உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இதனால் அண்டை மாநிலங்களான கர்நாடக, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வார விடுமுறை நாட்களில் குவிந்து வருகின்றனர். புங்கனூர் பகுதியில் படகு சவாரி இல்லம் அமைந்துள்ளது.

    இது முக்கிய சாலையிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சாலையின் இரு பக்கங்களிலும் சுற்றுலா பயணிகள் நடப்பதற்காக நடைபாதைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நடைபாதையில் அப்பகுதி மக்கள் கடைகள் வைத்து, ஷீட்டுகள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    இதனால் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் படகு இல்ல சாலைகளில் கூட்ட நெரிசல்கள், வாகன நெரிசல்கள் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் நடக்க வழி வகை செய்ய வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்நிலையில் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆணைக்கிணங்க திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் ரவிமாராஜன், கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் ஆகியோர் ஆக்கிரமித்து இருந்த கடைகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கினர்.

    ஆனால் இதுவரை கடைகளை அகற்றாததால் வருவாய்த்துறையினர் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்து பொக்மூலைன் எந்திரம் மூலம் கடைகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    படகு இல்ல சாலையில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக, நடைபாதைகளில் இருந்த கடைகளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு கடைகளை அகற்றக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கடைகளை அகற்ற துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    இதனை பெரிதும் பொருட்படுத்தாமல் கடைகளை அகற்றாமல் இருந்த நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

    விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு நடைபாதையில் நடந்து செல்ல வழிவகை செய்யப்படும் என்றனர். உடன் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணைத் தலைவர் திருமால், ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை
    • கால்வாய் அமைக்கும் பணிக்கு குறியீடு

    செங்கம்:

    செங்கம் நகரில் போளூர் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக கடை மற்றும் வீடுகள் கட்டி பயன்பாட்டில் இருந்து வந்தது.

    இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    செங்கம் மில்லத்நகர் அருகே உள்ள போளூர் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய் அமைக்கும் பணிக்கு குறியீடு செய்யப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் நடவடிக்கை
    • நோட்டீஸ் அளித்து காலஅவகாசம் அளித்தனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் கோட்டை மைதானம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தது.

    ஆக்கிரமிப்பு அகற்றம்

    இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுவதால் கோட்டை மைதானம் சுற்றியுள்ள அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

    இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி மற்றும் ஆரணி வருவாய் துறையினர் ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அளித்து காலஅவகாசம் வழங்கினார்கள்.

    இதனையடுத்து நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தாசில்தார் ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் கோட்டை வீதி பேருந்து நிலையங்கள் செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள்.

    ஆரணி முக்கிய வீதிகளான பேருந்து நிலையங்கள் மற்றும் கோட்டை வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • தனிப்பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.
    • இருப்பினும், முழுவதுமாக அகற்றவில்லை எனத் தெரிகிறது.

    மங்கலம்பேட்டை, நவ.24-

    விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில், விருத்தாசலம்-உளுந்தூ ர்பேட்டை மெயின் ரோடு (எஸ்.எச்.69 மாநில நெடு ஞ்சாலை) மற்றும் கடை வீதியில் 100-க்கும் மேற்ப ட்ட வீடு மற்றும் கடைகள் உள்ளன. இவற்றிற்கு முன்புற பகுதிளில், அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து பல கட்டிடங்கள் கட்டப்பட்டி ருப்பதாகவும், இங்குள்ள கடை மற்றும் வணிக நிறுவ னங்களின் முன்புற பகுதி களில் தகர ஷீட்டு களால் ஷெட்டுகள், கொட்ட கைகள் அமைத்து பலர் ஆக்கிரமிப்பு செய்திரு ப்பதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்தில் சிக்கிக் கொண்டவர்கள், உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் உரிய நேரத்திற்குள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட வழியில்லாமல் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால், மங்கல ம்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறி, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், விருத்தா சலம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுலகம் சார்பில், கடந்த அக்டோபர் மாதம் இறுதியில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், விருத்தாசலம் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம்- உளுந்தூ ர்பேட்டை-விழுப்புரம் சாலையில், மங்கலம்பேட்டை மாநில நெடுஞ்சாலை எண்:69-ல், 13/4 முதல் 16/6 கி.மீ., வரை உள்ள ஆக்கிரமிப்பினை தாங்களாகவே முன்வந்து 15.11.2022 அன்று மாலை 6 மணிக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால் நெடுஞ்சாலைத் துறை மூலம் 16.11.2022 காலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். இதனால் ஏற்படும் எவ்விதமான இழப்பீடுகளுக்கும் நெடுஞ்சாலைத் துறை பொறுப்பேற்காது என்று கூறப்பட்டிருந்தது. இதனால், கடை மற்றும் வீடுகளின் முன்பு போடப்பட்டிருந்த தகர ஷீட் ஷெட்டுகள் மற்றும் கொட்டகைகளை பலர் தாங்களாகவே முன் வந்து அகற்றிக் கொண்டனர்.

    இருப்பினும், முழுவதுமாக அகற்றவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை கடலூர் கோட்டப் பொறியாளர் பரந்தாமன் உத்தரவின்பேரில், விரு த்தாசலம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் அறிவு க்களஞ்சியம், அப்போது, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் விவேகானந்தன், சாலை ஆய்வாளர்கள் அருணகிரி, விமலாராணி, ராணி ஆகியோர் தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நேற்று காலை மங்கலம்பேட்டை மெயின் ரோடு, கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணியி னை மேற்கொண்டனர். இந்தப் பணியின்போது, மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரே பொன்னியம்மன் கோவில் தெரு, போஸ்கோ நகர், தண்டபாணி கோவில் தெரு உள்ளிட்ட பெரிய ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 113 ஏக்டர் பரப்பில் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டி டங்களை இடித்து அப்புறப்படுத்த சென்னை ஜகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகம் எதிரே இருந்த நீர்ப்பிடிப்பு ஆக்கிரமிப்பு கடை அகற்ற முயன்ற போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 7 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை நடத்தியதில் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதிக்கு பிறகு அப்புறப்படுத்த முடிவெடுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்பு கடை களை அகற்றுவது குறித்து போராட்டக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போது குடியிருப்பு வீடுகளை தவிர்த்து வணிகரீதியான நிறுவனங்கள் மற்றும் கடைகளை சனிக்கிழமை அப்புறப்படுத்திக்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முழு சம்மதம் தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து நேற்று பொதுப்பணித்துறை நீர்வளத்துறை மூலம் 5 பொக்லைன் எந்திரம் மூலம் வருவாய்த்துறையினனர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கலெக்டர் தகவல்
    • ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்தனர்:-

    பல்வேறு இடங்களில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது.

    நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பாகுபாடு இன்றி அகற்றப்பட்டு, இடங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது, தொடர்ந்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே இதில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை.‌ இது போன்ற பிரச்சனைகளை விவசாயிகள் மனுக்களாக வழங்கலாம் என்றார்.

    தொடர்ந்து விவசாயிகள் பேசியதாவது:-

    சீக்கராஜபுரம், வடகால் பொன்னை ஆற்றுக்கால்வாயில் ஆக்கிரம்புகள் உள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக பொன்னையாற்றில் தண்ணீர் சென்றும், வடகால் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.

    பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இதுவரையில் ஆழ்துளை போடப்பட்டு பல விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட வில்லை.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் எதிர்வரும் சம்பா பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எவ்வித அரசியல் தலையிடும் இல்லாமல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

    கடன் சங்கங்களில் விவசாயிகள் 6 மாதத்திற்கான பயிர் கடன்கள் வருகின்றனர்.இதனை ஒரு வருட பயிர் கடன் வழங்கும் நடைமுறையாக செயல்ப டுத்தினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் பிரச்சனைகள் விளை பொருட்கள் நாசமாகிறது. இப்பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. காட்டுப் பன்றிகளை சுட அரசு உத்தரவிட்டும், வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்றனர்.

    ×