மின்சாரம் பாய்ந்து மாடு பலி

அறுந்து கிடந்த கம்பியை மிதித்தபோது பரிதாபம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மின்சாரம் பாய்ந்து மாடு பலி
Published on

வேலூர்:

வேலூர், முள்ளிபாளையம், ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மதன்குமார். இவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று கொண வட்டம் பைபாஸ் சாலை அருகே மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட லாரி வேகமாக வந்தது.அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள மின்கம்பத்தில் லாரி மோதியது. இதனால் மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது.

அந்த வழியாக சென்ற மதன் குமாரின் பசுமாடு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தது. இதில் பசு மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

தகவல் அறிந்த கொணவட்டம் மின்சார வாரிய ஊழியர்கள் உடனடியாக அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். மின்கம்பத்தின் மீது லாரி மோதியது குறித்து கொணவட்டம் மின்வாரிய பொறியாளர் தினேஷ்குமார் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com