search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செதுவாலை சாலை விபத்தில் முதியவர் பலி
    X

    செதுவாலை சாலை விபத்தில் முதியவர் பலி

    • யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூரை அடுத்த செதுவாலையில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடக்கமுயன்றார்.

    அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×