search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    20 லிட்டர் சாராயம் பறிமுதல்
    X

    20 லிட்டர் சாராயம் பறிமுதல்

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கியது
    • தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள சின்ன பள்ளி குப்பம் கிராமத்தில் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை கண்டவுடன் அங்கிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.

    பின்னர் அங்கு இருந்த 20 லிட்டர் சாராய பொட்டலங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் தப்பி ஓடிய எல்லுப்பாறை மலைகிராமத்தை சேர்ந்த சிவா என்பவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×