search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது
    X

    கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது

    • சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்
    • போலீசார் ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்ன தொட்டாளத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 38). இவர் அந்த பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெரியாங்குப்பம் புதுமணையை சேர்ந்த பிரபல ரவுடி அமெரிக்கா என்கிற ராஜேஷ் என்பவர் மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் நடந்து சென்ற மோகனை வழிமறித்து ரூ.2 ஆயிரம் தரவேண்டும் என மிரட்டினார்.

    அதற்கு மோகன் தன்னிடம் பணம் இல்லை என மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் மோகனை சரமாரியாக தாக்கி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதேபோல் சின்ன தொட்டாளத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 38). என்வரிடமும் ராஜேஷ், அவரது நண்பர்கள் கதிர்வேல், ராதா, பிரபு ஆகியோர் ராஜ்குமாரிடம் பணத்தைக் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இது குறித்து மோகன், ராஜ்குமார் ஆகியோர் தனித்தனியாக மேல்பாடி போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேசை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×