search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    51 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
    X

    51 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

    • அனுமதியின்றி விற்றால் நடவடிக்கை
    • கடையின் அருகே டீக்கடை, ஓட்டல் வைக்க அனுமதி இல்லை

    வேலூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வியாபாரிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார்.

    தாசில்தார்கள் செந்தில் குமார், ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வேலூர் மாவட்ட பட்டாசு வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் ஜனார்த்தனன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாங்கள் பல ஆண்டுகளாக உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்தி வருகிறோம். திடீரென எங்கள் கடையின் அருகே டீக்கடை, ஓட்டல் வைத்து நடத்துகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு வியாபாரத்தினை நம்பி பல வியாபாரிகள் உள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் வியாபாரம் நடைபெறுவதால் எங்களது வியாபாரம் பாதிக்கபடுகிறது.

    ஆன்லைன் வியாபாரத்தால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆன்லைன் வியாபாரத்தை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதற்கு பதில் அளித்து வேலூர் உதவி கலெக்டர் கவிதா பேசியதாவது:-

    உரிமம் இன்றி பட்டாசுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாராவது அவ்வாறு பட்டாசு விற்பனை செய்தால் அவர்கள் குறித்து உடனடியாக எனக்கோ அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் புகார் தெரிவிக்கலாம்.

    பட்டாசு கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தகுந்த பயிற்சிகள் வழங்க வேண்டும். கடைகளில் இரு வழி பாதைகள் இருக்க வேண்டும். கடையில் தீ தடுப்பு உபகரணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

    மின் வயர்கள் பாதுகாப்பான முறையில் குழாய்கள் மூலமே கடைக்குள் பதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.மின் இணைப்பு பெட்டி கடையின் வெளியே வைத்திருக்க வேண்டும்.

    மளிகை கடையில் பட்டாசுகள் விற்பனை செய்ய கூடாது. வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யக்கூடாது. இது போன்ற புகார்கள் வந்தால் தெரிவிக்கலாம். வேலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து

    இந்த தீபாவளியை விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் இல்லாத தீபாவளியாக கொண்டாட வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேலூர் கோட்டத்தில் 51 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவர் அவர் கூறினார்.

    Next Story
    ×