என் மலர்
நீங்கள் தேடியது "Severe abdominal pain"
- உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்து காணப்பட்டார்
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வசந்தநடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தீர்த்தம். இவருடைய மனைவி ஹேமலதா (வயது 40) இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே ஹேமலதா கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது மகள்கள் வந்து பார்த்த போது ஹேமலதா தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமுதா அதிக வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார்.
- இது குறித்து, திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அத்திபடுகையைச்சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி அமுதா (வயது 48). அமுதா அதிக வயிற்று வலியால் அவதியுற்று வந்துள்ளார். இதற்கான சிகிச்சையும் அவர் எடுத்து வந்துள்ளார். இருந்தும், வயிற்று வலி அதிகமாகவே காணப்பட்டு வந்தது. இப்படி வயிற்று வலியால் அவதியுறுவதை காட்டிலும் செத்துவிடலாம் என புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை அமுதா குடித்தார். அப்போது அங்கு வந்தகலியபெருமாள் உடனடியாக தேனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச்செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அமுதா இறந்து போனார். இது குறித்து, திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






