search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி மூதாட்டி சாவு
    X

    லாரி மோதி மூதாட்டி சாவு

    • சாலையை கடந்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    கர்நாடக மாநிலம், கோலாரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி ஜெகதா (வயது 70). இவர் கொணவட்டத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார்.

    நேற்று முன்தினம் காலை கொணவட்டம் அரசு போக்குவரத்து பணி மனை அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஜெகதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஜெகதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கே.வி.குப்பத்தை சேர்ந்த லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×