search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electrician killed"

    • வேலை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, விருதம்பட்டு அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 56). இவர் நேற்று தனது வீட்டு குளியல் வேலை அறையில் ஒயரிங் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கிருஷ்ணன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

    உறவினர்கள் கிருஷ்ணனை மீட்டு சிகிச்சை க்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவியரசன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்தது.
    • பரிசோதித்த டாக்டர்கள் கவியரசு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த காரப்பாடி கிராம த்தை சேர்ந்தவர் கவியரசு (வயது 45). இவர் எலக்ட்ரீசி யனாக வேலை செய்து வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவும் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ள னர்.

    இந்த நிலையில் கவியரசு கொமார கவுண்டன் பாளை யம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பழுது அடைந்த மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது கவியரசன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்தது. இதில் அவர் கீழே விழுந்தார். இதை கண்ட உடன் இருந்த பிரகாஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மரு த்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கவியரசு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கவியரசு உடல் பிரேதபரி சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 6 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    வேலூர் கலாஸ்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சரவணன் (வயது 40) எலக்ட்ரீசியன். இவர் நேற்று உமராபாத் அருகே மாச்சம்பட்டு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் அவரது பைக்கில் வேலூருக்கு புறப்பட்டு வந்தார். அவரது நண்பர் ஒருவரும் உடன் வந்தார்.

    ஆம்பூர் அருகே உள்ள பச்சகுப்பம் பாலாற்றில் குளிப்பதற்காக பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினர். சரவணன் தனது உடைகளை கழட்டி பைக் மீது வைத்து விட்டு பாலாற்றில் குளிக்க இறங்கிய போது அதிக அளவில் தண்ணீர் வரும் பாலாற்றின் தரைப்பாலம் அருகே உள்ள சுழலில் சிக்கி மூழ்கினார். இதைப் பார்த்த நண்பர் கூச்சலிட்டார்.

    உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கும் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் உதவியுடன் சரவணன பிணமாக மீட்டனர்.

    சரவணனுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. ஜெயந்தி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    ஆம்பூர் தாலுகா போலீசார் சடலத்தை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×