என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
- வேலை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி, விருதம்பட்டு அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 56). இவர் நேற்று தனது வீட்டு குளியல் வேலை அறையில் ஒயரிங் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கிருஷ்ணன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.
உறவினர்கள் கிருஷ்ணனை மீட்டு சிகிச்சை க்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






