search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம்
    X

    வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம்

    • வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் குறித்து பேசினார்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவை தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் ஏ. பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நரசிம்மன், வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.அமலு விஜயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா ,துணை மேயர் சுனில் குமார், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க. வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் வருகிற 22-ந்தேதி திருவண்ணாமலையில் நடக்கிறது.

    இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி முகவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    தி.மு.க. மகளிர் அணி மாநாட்டை சிறப்பாக நடத்திய முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, மகளிர் உரிமை மாநாடு வெற்றி பெற மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்த கனிமொழி எம்.பி.க்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×