என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆந்திரா வாலிபர்
- போக்சோவில் கைது
- சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
வேலூர்:
ஆந்திர மாநிலம், சித்துார் அடுத்த பலமநேரி அருகே உள்ள பெத்தபஞ்சாணி பகுதியைச் சேர்ந்தவர் காலேஷா (வயது 25). இவர் குடியாத்தம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து குடியாத்தம் நகரில் உள்ள கடைகளுக்கு சாம்பிராணி புகை போடும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் காலேஷா, வழக்கம் போல் காட்பாடி 'சாலையில் உள்ள கடைகளுக்கு புகைபோட சென்றார். அப்போது அங்குள்ள ஒரு கடையில் சாம்பிராணி புகை போடும்போது கடையில் இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து சிறுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காலஷாவை பிடித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அனைத்து மகளிர் போலீசிஸ் இன்ஸ்பெக்டர் ஷியாமளா தலைமையிலான போலீசார், போக்சோ சட்டத்தில் காலேஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






