என் மலர்
நீங்கள் தேடியது "Lakh theft"
- கேமராவில் பதிவான திருடனை பிடிக்க தீவிரம்
- பணத்தை அவரது ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியில் வைத்திருந்தார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள மண்டலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.முன்னாள் ராணுவ வீரர்.
இவருடைய மனைவி சுவிதா (வயது 42) இவர் இன்று காலை ரூ.2½ லட்சம் பணத்துடன் சந்தை கோடியூரில் உள்ள வங்கிக்கு வந்தார். பணத்தை அவரது ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியில் வைத்திருந்தார்.
வங்கியின் உள்ளே சென்று சுவிதா படிவத்தை நிரப்ப சென்றார். அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் சுவீதாவின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.2½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டார். ஸ்கூட்டரில் இருந்த பணத்தை எடுப்பதற்காக சுவிதா வங்கியில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் .வங்கி முன்பு உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் சுவிதாவின் ஸ்கூட்டரில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.இதன் மூலம் போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஜோலார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கேமரா பதிவு மூலம் போலீசார் விசாரணை
- பூட்டை உடைத்து துணிகரம்
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் பாலாறு அணைக்கட்டு செல்லும் சாலையில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்த குமார் (48) என்பவர் பல வருடங்களாக நெல்லை சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் அவர் அந்த கடையின் மேல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் அவர் கடையை திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடை கல்லாப் பெட்டியில் வைத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தையும், மளிகை பொருட்கள் சிலவற்றையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து குமார் வாலாஜா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். கேமரா பதிவுகளில் 2 நபர்கள் கல்லாப்பெட்டிகளில் இருந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மளிகை கடையில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு
- கும்பலுக்கு வலைவீச்சு
வேலூர்:
குடியாத்தம் அடுத்த ஆர்.எஸ்.ரோடு, விஸ்வநாதன் நகரைச் சேர்ந்தவர் குபேந்திரன்(வயது 61). ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.
இவர் குடியாத்தத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.1.50 லட்சம் பணத்தை பெற்று கொண்டு தனது பைக் பெட்டியில் வைத்தார். பின்னர் அங்கிருந்து மருந்து கடைக்கு சென்று மாத்திரை
வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றார். இதனையடுத்து பெட்டியை திறந்து பார்த்த போது பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து குபேந்திரன் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






