என் மலர்
உள்ளூர் செய்திகள்

வங்கி முன்பு நிறுத்திய ஸ்கூட்டரில் இருந்து ரூ.2½ லட்சம் திருட்டு
- கேமராவில் பதிவான திருடனை பிடிக்க தீவிரம்
- பணத்தை அவரது ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியில் வைத்திருந்தார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள மண்டலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.முன்னாள் ராணுவ வீரர்.
இவருடைய மனைவி சுவிதா (வயது 42) இவர் இன்று காலை ரூ.2½ லட்சம் பணத்துடன் சந்தை கோடியூரில் உள்ள வங்கிக்கு வந்தார். பணத்தை அவரது ஸ்கூட்டர் இருக்கைக்கு அடியில் வைத்திருந்தார்.
வங்கியின் உள்ளே சென்று சுவிதா படிவத்தை நிரப்ப சென்றார். அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் சுவீதாவின் ஸ்கூட்டரில் இருந்த ரூ.2½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டார். ஸ்கூட்டரில் இருந்த பணத்தை எடுப்பதற்காக சுவிதா வங்கியில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் .வங்கி முன்பு உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் சுவிதாவின் ஸ்கூட்டரில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.இதன் மூலம் போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஜோலார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.






