என் மலர்
திருவண்ணாமலை







திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தாழம்ஓடை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது37) சிற்பி. இவர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தும் வகையில் அடையாள மையிடும் ஒற்றை விரலை உயர்த்தி காட்டும் கற்சிலை செய்துள்ளார்.
3 நாளில் அதனை உருவாக்கிய சிற்பி சுரேஷ் அதனை திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தார்.
மேலும் அவர் செய்த திருவள்ளுவர் சிலை, சாமி சிலைகள் உள்ளிட்டவைகளையும் வைத்திருந்தார். இதனை பார்வையிட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் பொதுமக்கள் சிற்பி சுரேசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேலாரணியில் இருந்து கீழ் தாங்களல் செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தகவலறிந்த எஸ்.பி. அரவிந்த் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
முதற்கட்ட விசாரணையில் கொலையான நபர் கீழ்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பர்வதம் மகன் பிரகாஷ் (வயது 28) என்று தெரியவந்தது. இவரை கொடூரமாக கொலை செய்தது யார்? எதற்காக கொல்லப்பட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கலசப்பாக்கம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவர் கொன்று புதைக்கப்பட்டதும்,சொர குளத்தூர் காப்புக்காட்டில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததும் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த 2 கொலைக்கான காரணங்களையும் அது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் இதுவரை பிடிக்கவில்லை.
இந்த நிலையில் 3-வது சம்பவமாக வாலிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
வேட்டவலம்:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் வாக்களிக்க பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படை அமைத்து அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே தானிபூண்டி பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை வந்த பஸ்சை நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ்சில் பயணம் செய்த சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரிடம் இருந்து ரூ.90 ஆயிரமும், சென்னை திருவான்மியூர் காமராஜர் நகரை சேர்ந்த தீனதயாளன் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 500-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபற்றி பறக்கும் படை அலுவலர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:-
உரிய ஆவணம் இல்லாமல் பணத்தை கொண்டு சென்றதால் பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.
திருவண்ணாமலை காந்தி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பங்க்பாபு (வயது 47) ரியல் எஸ்டேட் அதிபர்.
இவர் கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் பங்க்பாபுவை பழிக்கு பழி வாங்கும் வகையில் கூலிப்படையை வைத்து வெட்டிக்கொன்றது தெரிய வந்தது.
கடந்த 2017 ஆம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த அ.தி.மு.க .பிரமுகர் கனகராஜ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பங்க்பாபுவை , கனகராஜ் மனைவி மற்றும் மாமியார் உள்பட உறவினர்கள் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் வேலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜா என்பவரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து அதிரடி விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை ரியல் எஸ்டேட் அதிபர் பங்க்பாபு கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தகொலையில் வேலூரை சேர்ந்த ரவுடி வசூர்ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளோம்.
அவர் கொடுத்த சில தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.






திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ்வரம் மற்றும் தவில் இசை சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று நாதசுர இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 39 வதுஆண்டாக நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு 108 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது மக்களை வெகுவாக கவர்ந்த பக்தி பாடல்களை இசைத்து மகிழ்வித்தனர்.
கோவில் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்கள் இசை நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இசை நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.
உலக மக்கள் எந்தவித இயற்கை இடர்பாடுகளும் இல்லாமல், கொரோனா உள்ளிட்ட கொடிய நோய்கள் தாக்காமல் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டாவூர் அண்ணாநகர் பகுதியில் சிமெண்டால் செய்யப்பட்ட எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர். சிலையின் வலது கையை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.
இன்று காலை அந்த வழியாக சென்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலையின் கை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிலை உடைக்கப்பட்ட தகவல் பரவியதால் அப்பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த செங்கம் டி.எஸ்.பி. சரவணகுமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






