என் மலர்
செய்திகள்

வசூர் ராஜா
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு- வேலூர் ரவுடி வசூர் ராஜாவிடம் போலீசார் விசாரணை
திருவண்ணாமலை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு தொடர்பாக வேலூர் ரவுடி வசூர் ராஜாவிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை காந்தி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பங்க்பாபு (வயது 47) ரியல் எஸ்டேட் அதிபர்.
இவர் கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் பங்க்பாபுவை பழிக்கு பழி வாங்கும் வகையில் கூலிப்படையை வைத்து வெட்டிக்கொன்றது தெரிய வந்தது.
கடந்த 2017 ஆம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த அ.தி.மு.க .பிரமுகர் கனகராஜ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பங்க்பாபுவை , கனகராஜ் மனைவி மற்றும் மாமியார் உள்பட உறவினர்கள் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் வேலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜா என்பவரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து அதிரடி விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை ரியல் எஸ்டேட் அதிபர் பங்க்பாபு கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தகொலையில் வேலூரை சேர்ந்த ரவுடி வசூர்ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளோம்.
அவர் கொடுத்த சில தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
திருவண்ணாமலை காந்தி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பங்க்பாபு (வயது 47) ரியல் எஸ்டேட் அதிபர்.
இவர் கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் பங்க்பாபுவை பழிக்கு பழி வாங்கும் வகையில் கூலிப்படையை வைத்து வெட்டிக்கொன்றது தெரிய வந்தது.
கடந்த 2017 ஆம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த அ.தி.மு.க .பிரமுகர் கனகராஜ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பங்க்பாபுவை , கனகராஜ் மனைவி மற்றும் மாமியார் உள்பட உறவினர்கள் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் வேலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜா என்பவரை திருவண்ணாமலை கிழக்கு போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து அதிரடி விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை ரியல் எஸ்டேட் அதிபர் பங்க்பாபு கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தகொலையில் வேலூரை சேர்ந்த ரவுடி வசூர்ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளோம்.
அவர் கொடுத்த சில தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
Next Story






