என் மலர்
செய்திகள்

விபத்து
செங்கம் அருகே லாரி மோதி 2 பேர் பலி
செங்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செங்கம்:
செங்கம் அருகே உள்ள கோட்டகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆறுமுகம் (வயது 70), பாலையா (55). இவர்கள் இருவரும் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மினி லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






