என் மலர்
திருவள்ளூர்
- ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.
- ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் மாலை 5 மணி முதல் விநாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு 5,900 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், 5000 கன அடி நீர் வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நாகலாபுரம் அருகே உள்ள பிச்சாட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- ஆரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
திருத்தணி:
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அம்மப்பள்ளி அணை நிரம்பி உள்ளது.
கடந்த 2 வாரத்திற்கு முன்பு பலத்த மழை கொட்டியபோது உபரி நீர் திறக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் அம்மப்பள்ளி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் அம்மப்பள்ளி அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் நகரி, திருத்தணி, பள்ளிப்பட்டு வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து பூண்டி ஏரிக்கு வருகிறது.
அம்மப்பள்ளி அணை திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருத்தணி அருகே உள்ள நெடியம், சமந்தவாடா, சுரக்காப்பேட்டை பகுதியில் உள்ள 3 தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளன.
இதனால் அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. தரைப்பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் சுற்றி சென்று வருகின்றன. திருத்தணி, பள்ளிப்பட்டு அருகே கொசஸ்த்தலை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு பாய்கிறது. கொசஸ்தலை ஆற்றின் கரைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள பிச்சாட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியதால் இன்று காலை 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
- கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள கரையோர தாழ்வான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 3500 கனஅடியாக உள்ளது.
கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள கரையோர தாழ்வான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆட்ராம்பாக்கம், ஒத்தப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 3500 கனஅடியாக உள்ளது. நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பு அளவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோ வயலில் பாய்ந்து கவிழந்தது.
- ஒரு பயணிக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.
பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக சாணாபுத்தூர் செல்லும் அரசு பஸ்(எண் டி62) இன்று காலை புறப்பட்டது. பஸ்சை டிரைவர் வீரய்யன் ஓட்டினார். காலையில் மழை பெய்து கொண்டு இருந்ததால் 2 பயணிகள் மட்டும் பஸ்சில் இருந்தனர்.
பொன்னேரி அடுத்த காட்டாவூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோ வயலில் பாய்ந்து கவிழந்தது.
இதில் ஒரு பயணிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. டிரைவர், கண்டக்டர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
- பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 34.05 அடியை எட்டியது.
- நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பின் அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் பூண்டி அணையின் நீர்மட்டம் 34.05 அடியை எட்டிய நிலையில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 34.05 அடியை எட்டியது.
அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி நிலவரப்படி பூண்டி அணைக்கான நீர்வரத்து 1,290 கனஅடியாக உள்ள நிலையில் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பிற்பகல் 1.30-க்கு 1000 கனஅடி உபரிநீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் நீர்திறப்பு படிப்படியாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பின் அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பூண்டி நீர்தேக்கத்தில் நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆட்ராம்பாக்கம், ஒத்தப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரத்தில வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குப்பம், மணலி, இடையான்சாவடி, எண்ணூர், வெள்ளிவாயல்சாவடி உள்ளிட்ட தாழ்வான பகுதி வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுலவர் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், சேலம், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுலவர் தெரிவித்துள்ளார்.
- மழை பெய்த நிலையில் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளது.
- சாலைகள் முழுவதும் பழுதடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு கலைஞர் நகர் முதல் தெரு, 2-வது தெரு, ராஜேஸ்வரி நகர், பிரனாவநந்தா பள்ளி தெரு மற்றும் நாலூர் ஊராட்சிக்கு உள்பட்ட கேசவபுரம் பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
ஃபெஞ்ஜல் புயல் காரணமாக மழை பெய்த நிலையில் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசி வருவதாகவும், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இரவு நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், சாலைகள் முழுவதும் பழுதடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி துணை கமிஷனர் ஆலோசனையின் பேரில் பொன்னேரி பழவேற்காடு சாலை திருப்பாலைவனம் பஜாரில் திருப்பாலைவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவை சேர்ந்த முசாமின் (50) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 65 கிலோ குட்காவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை செய்ததில் பொன்னேரி தாயுமாண் செட்டி தெருவில் மளிகைக் கடை நடத்தி வரும் பெருலால் (28) என்பவர் கடையில் பதுக்கி வைத்து அங்கிருந்து கிராமங்களில் உள்ள கடைகளுக்கு முசாமின் மூலம் இருசக்கர வாகனத்தில் விற்பனை செய்வது தெரிய வந்தது.
பின்னர் இருவரையும் கைது செய்து கடையில் பதுக்கி வைத்த 65 கிலோ குட்கா, விற்பனை செய்த 65 கிலோ குட்கா என மொத்தம் 130 கிலோவை திருப்பாலைவனம் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சுந்தரையாஸ் தெரு சாலை சேதம் அடைந்தது.
- ஆற்றின் கரையோரம் இருந்த 2 மின் கம்பம் சாய்ந்தன.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் பிரதான 5 நீரேற்று நிலையத்தில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குழாய்கள் ஆரணி ஆற்றின் குறுக்கே நவீன தொழில்நுட்ப உதவியுடன் ராட்சத துளையிடும் எந்திரத்தின் மூலம் 250 மீட்டர் நீளம் 10 மீட்டர் ஆழத்தில் துளையிடும் பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சுந்தரையாஸ் தெரு சாலை சேதம் அடைந்தது. மேலும் ஆற்றின் கரையோரம் இருந்த 2 மின் கம்பம் சாய்ந்தன. சேதம் அடைந்த சாலை அருகே எந்திரம் உள்ளதால் ஆரணி ஆற்றின் குறுக்கே குழாய் பதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
- டாஸ்மாக் ஊழியர் சக்திவேல் என்பவர் வெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தார்.
- அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமழிசை:
ஃபெஞ்ஜல் புயலின்போது விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூர் பகுதியில் டாஸ்மாக் ஊழியர் சக்திவேல் என்பவர் வெள்ளத்தில் சிக்கி மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க கோரி திருமழிசையில் உள்ள டாஸ்மாக் கிடங்கு அருகே திருவள்ளூர் கிழக்கு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலர் தனசேகர், ஐ.என்.டி.யூ.சி மாநில தலைவர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சிவகாமி, கணவரிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து உள்ளார்.
- வழக்கில் தலைமறைவான மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
செங்குன்றம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவாங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் (33). கார் டிரைவர். இவரது மனைவி சிவகாமிஸ்ரீ. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் சிவகாமி, கணவரிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து உள்ளார். ஆனால் ராமகிருஷ்ணன் மனைவியை பிரிய மனம் இல்லாததால் விவகா ரத்திற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 28-ந்தேதி ராமகிருஷ்ணன் சென்னைக்கு சவாரி வந்தார். அப்போது அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மனைவி சிவகாமிஸ்ரீ பேச வேண்டும் என்று கூறி சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை கணேஷ் நகருக்கு வருமாறு அழைத்தார்.
ராமகிருஷ்ணன் அங்கு சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் திடீரென அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் தலை, கையில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த ராமகிருஷ்ணன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் விவாகரத்து கொடுக்க மறுத்ததால் கணவரை மனைவி சிவகாமிஸ்ரீயே கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சிவகாமி ஸ்ரீ, மதுரவாயல் ஏரிக்கரையைச் சேர்ந்த நவீன், மதுரவாயல் கிருஷ்ணா நகரை சேர்ந்த கெல்வின் ராஜ், அரும்பாக்கத்தை சேர்ந்த நித்திஷ் ராஜ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- அணைக்கட்டிற்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
- கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வருகிறது.
திருவள்ளூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் வழியாக வரும் கல்லாற்று தண்ணீர் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்து கேசாவரம் அணைக்கட்டு பகுதிக்கு வரும். பின்னர் அங்கிருந்து கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என 2 ஆறுகளாக பிரிகிறது.
கேசவரம் அணைக்கட்டு நிரம்பினால், நேரடியாக கொசஸ்தலை ஆற்றில் செல்லும் நீர் பூண்டி ஏரிக்கு செல்லும். இதேபோல் அணைக்கட்டின் மற்றொரு புறம் அமைக்கப்பட்ட, 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் மழைநீர் கூவம் ஆறாக மாறி பேரம்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக சென்னை நேப்பியார் பாலம் அருகே சென்று கடலில் கலக்கும்.
இந்த நிலையில் ஃபெஞ்ஜல் புயலால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக கேசவபுரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி வழிகிறது. அணைக்கட்டிற்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதையடுத்து 1000 கன அடி நீர் கேசவபுரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறி வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பூண்டி ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.
பாகசாலை, மணவூர், விடையூர், நாத்தவாடா, நாராயணபுரம் ஆகிய பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வருகிறது.
இதேபோல் கூவம் ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பேரம்பாக்கம் பிஞ்சிவாக்கம், ஏகாட்டூர், புட்லூர் ஆகிய பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி காணப்படுகிறது. கூவம் ஆற்றின் நடுவே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதுச்சத்திரம் தரைப்பாலம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் செல்கிறது. புதுச்சத்திரம் தரைப்பாலம் மூழ்கினால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்படும்.






