என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீஞ்சூர்"

    • சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • சத்துணவு ஊழியர்கள், மனுவில் உள்ள தங்களின் கையெழுத்து அருகே ரத்தத்தில் கைவிரல் ரேகைகளை பதிவிட்டனர்.

    பொன்னேரி:

    பள்ளிகளில் காலை உணவு திட்டம் மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மீஞ்சூர் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. மீஞ்சூர் வட்டார தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் வளர்மதி, செயலாளர் லதா, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும், உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் குடும்ப பாதுகாப்பு ஓய்வு ஊதியம் ரூ.8,750 வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தினர். அப்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவில் ரத்தத்தால் கையெழுத்திட்டனர்.

    இதற்காக நர்சு ஒருவர் வந்து இருந்தார். அவர் சத்துணவு ஊழியர்கள் ஒவ்வொருவரின் கையிலும் ஊசியால் குத்தி ரத்தத்தை எடுத்தார். பின்னர் சத்துணவு ஊழியர்கள், மனுவில் உள்ள தங்களின் கையெழுத்து அருகே ரத்தத்தில் கைவிரல் ரேகைகளை பதிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கூறும்போது, இந்த ரத்த கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்க உள்ளோம். அவர் வாங்க மறுத்தால் முதலமைச்சருக்கு அனுப்பி வைப்போம் என்றனர்.

    • விபத்து நடந்த நேரத்தில் ஆட்டே ரேஸ் நடந்து இருப்பது தெரியவந்தது.
    • வாலிபர்கள் கூச்சலிட்டபடி பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது.

    பொன்னேரி:

    சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60.5 கி.மீ. தூரத்துக்கு வெளி வட்டச் சாலை 6 வழி சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையானது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை செங்குன்றம், பொன்னேரி மீஞ்சூர், திருவொற்றியூர், பஞ்செட்டி ஆகியவற்றுடன் இணைக்கிறது.

    மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் கனரக வாகனங்கள் எவ்வித தடையின்றி செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு பெரிய அளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த சாலை அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்படும்.

    இந்த சாலைகளில் தடையை மீறி வாரவிடுமுறை நாட்களில் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் தொடர்ந்து நடந்து வருகின்றன.போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அவ்வப்போது ரேஸ் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் சோழவரம் அருகே அருமந்தை என்ற பகுதியில் அதிகாலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த மணி, ஷாம் சுந்தர் ஆகிய 2 பேர் பலியானார்கள்.

    மேலும் மோகனகிருஷ்ணன், மாரிமுத்து, ஜெபேயர் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அங்குள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது விபத்து நடந்த நேரத்தில் ஆட்டே ரேஸ் நடந்து இருப்பது தெரியவந்தது.

    மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் போட்டி போட்டு சீறி பாய்ந்து செல்வதும் அதன் பின்னாலேயே 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் கூச்சலிட்டபடி பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகி உள்ளது.

    ரேசின் போது ஆட்டோ ஒன்று கவிழ்ந்த போது அதனை பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்தவர்களும் அதன் மீது மோதி விழுந்து உள்ளனர். இதில் 2 பேர் பலியாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே ஆட்டோ ரேஸ் செல்வதை மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆட்டே ரேஸ் செல்வதை பார்க்கும் போதே அச்ச உணர்வு ஏற்படும் வகையில் சீறிப்பாய்கின்றன.

    வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சாகச ரேசை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வீடுகளுக்கு விஷ பூச்சிகள் பாம்பு உள்ளிட்டவை வருகின்றன.
    • 4 நாட்களுக்கு மேல் மழை நீர் தேங்கி உள்ளதால் கருப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

    பொன்னேரி:

    ஃபெஞ்ஜல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. பொன்னேரி, மீஞ்சூர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. மழை விட்டு ஒரு வாரம் ஆகியும் இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கி உள்ளது.

    மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு கலைஞர் நகர் முதல் தெரு, 2-வது தெரு ராஜேஸ்வரி நகர், பிரேமானந்தா பள்ளி தெரு உள்ளிட்ட இடங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது.

    குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு மழை நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    மேலும் மழை நீருடன் கழிவு நீர் கலந்து நிறம் மாறி துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.


    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மீஞ்சூர் பகுதியில் தாழ்வான இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. வீடுகளை சூழ்ந்து உள்ள தண்ணீரால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    வீடுகளுக்கு விஷ பூச்சிகள் பாம்பு உள்ளிட்டவை வருகின்றன. இதனால் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து வார்டு உறுப்பினர் சுகன்யாவிடம் கேட்டபோது, மழைக்காலங்களில் தொடர்ந்து இப்பகுதியில் தண்ணீர் தேங்கும் பிரச்சனை உள்ளது. மழை நீர் வெளியேற உள்ள குழாய் மிகவும் சிறிதாக உள்ளது. மேலும் மழைநீர் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளன.

    பொன்னேரி-மீஞ்சூர் சாலையில் கல்வெட்டு அமைத்து மழைநீர் வெளியேற நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது 4 மின்மோட்டார்கள் மூலம் மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் குறையாமல் உள்ளது என்றார்.

    மகாபலிபுரத்தில் பெய்த கனமழையால் இன்னமும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பொதுப்பணித்துறை சாலை, கல்பாக்கம் சாலை, தேவநேரி, சிற்பக்கல்லூரி எதிரே உள்ள பகுதிகளில் புதிதாக உள்ள வீட்டு மனைகளில் மனை வாங்கியோர் சவுடு மணல்களை குவித்து வைத்திருப்பதால் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. 4 நாட்களுக்கு மேல் மழை நீர் தேங்கி உள்ளதால் கருப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது.

    • மழை பெய்த நிலையில் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளது.
    • சாலைகள் முழுவதும் பழுதடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு கலைஞர் நகர் முதல் தெரு, 2-வது தெரு, ராஜேஸ்வரி நகர், பிரனாவநந்தா பள்ளி தெரு மற்றும் நாலூர் ஊராட்சிக்கு உள்பட்ட கேசவபுரம் பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    ஃபெஞ்ஜல் புயல் காரணமாக மழை பெய்த நிலையில் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசி வருவதாகவும், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இரவு நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், சாலைகள் முழுவதும் பழுதடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

    ×