என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூரில் வெள்ளம் வடியாததால் 250 குடும்பங்கள் தவிப்பு
    X

    மீஞ்சூரில் வெள்ளம் வடியாததால் 250 குடும்பங்கள் தவிப்பு

    • மழை பெய்த நிலையில் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளது.
    • சாலைகள் முழுவதும் பழுதடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு கலைஞர் நகர் முதல் தெரு, 2-வது தெரு, ராஜேஸ்வரி நகர், பிரனாவநந்தா பள்ளி தெரு மற்றும் நாலூர் ஊராட்சிக்கு உள்பட்ட கேசவபுரம் பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    ஃபெஞ்ஜல் புயல் காரணமாக மழை பெய்த நிலையில் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசி வருவதாகவும், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இரவு நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், சாலைகள் முழுவதும் பழுதடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×