என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பூண்டி ஏரி உபரி நீர்திறப்பு- முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
- பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 34.05 அடியை எட்டியது.
- நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பின் அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் பூண்டி அணையின் நீர்மட்டம் 34.05 அடியை எட்டிய நிலையில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 34.05 அடியை எட்டியது.
அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி நிலவரப்படி பூண்டி அணைக்கான நீர்வரத்து 1,290 கனஅடியாக உள்ள நிலையில் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பிற்பகல் 1.30-க்கு 1000 கனஅடி உபரிநீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் நீர்திறப்பு படிப்படியாக உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பின் அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பூண்டி நீர்தேக்கத்தில் நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆட்ராம்பாக்கம், ஒத்தப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரத்தில வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குப்பம், மணலி, இடையான்சாவடி, எண்ணூர், வெள்ளிவாயல்சாவடி உள்ளிட்ட தாழ்வான பகுதி வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






