என் மலர்
திருப்பூர்
- பக்கவாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய பிசியோதெரபி நிபுணர்களை நியமிக்க வேண்டும்
- மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் ஒரு சில பிசியோதெரபிஸ்டுகளே உள்ளனர்.
தாராபுரம்,ஆக.8-
அரசு மருத்துவமனைகளில் பக்கவாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய பிசியோதெரபி நிபுணர்களை நியமிக்க வேண்டும் என பிசியோதெரபிஸ்ட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் செயலாளர் டாக்டர் ராஜேஸ்கண்ணா கூறியதாவது:- அதிகரித்து வரும் சர்க்கரை நோயின் தாக்கம், உயர் ரத்த அழுத்தம், மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் காரணமாக பக்கவாதத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அறிகுறிகள் தெரிந்த, நான்கரை மணி நேரத்துக்குள் சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்தவோ, பாதிப்பை குறைக்கவோ முடியும்.
பக்கவாத பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்க, அரசு மருத்துவமனைகளில் போதிய பிசியோதெரபி மருத்துவர்கள் இல்லாதது, பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே காரணம். இதனால் கிராமப்புறத்தினர் இந்நோயால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் உடல் ஊனத்துடனே வாழ வேண்டிய சூழல் உள்ளது. அறிகுறிகள் தெரிந்த உடனே சிகிச்சை அளிக்க ஆரம்ப, வட்டார மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை.
பிசியோதெரபிஸ்ட்டுகளும் நியமிக்கப்படவில்லை. மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் ஒரு சில பிசியோதெரபிஸ்டுகளே உள்ளனர். இந்நிலை நீடித்தால், தமிழகத்தில் பக்கவாதத்தால், உடல் ஊனம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடனடியாக, பிசியோதெரபிஸ்டுகளை நியமிக்க வேண்டும். பயிற்சி பிசியோதெரபிஸ்டுகளை ஊக்க ஊதியத்துடன் தற்காலிகமாக பணியில் அமர்த்தவும் உத்தரவிட வேண்டும்.
பொது மக்களிடம் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன.
- மருத்துவ உள்ள புகார்கள் எது இருந்தால் உடனே பொதுமக்கள் 104க்கு தகவல் தெரிவிக்கலாம்.
திருப்பூர்:
தமிழகத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இங்கு சிகிச்சைக்காக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வந்து செல்கின்றனர்.மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவம னைகளில் பணியாற்றும் ஒரு சில டாக்டர்கள் சரியான நேரத்துக்கு வராமலும் சிலர் 3 நாட்களுக்கு ஒரு முறை பணிக்கு வந்து வருகை பதிவேட்டில் பணிக்கு வராத நாட்களிலும் கையொப்பமிடுவதாக புகார்கள் அரசுக்கு தொடர்ந்து சென்றது.
இதையடுத்து அரசு டாக்டர்களின் வேலை நேரத்தை கண்காணிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் ககன்தீப்சிங் பேடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மாவட்ட, தாலுகா, தாலுகா அல்லாத மருத்துவமனைகளில் உள்ள தலைமை டாக்டர்கள் காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும், மாலை 3மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நிர்வாக பணியில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
இதர டாக்டர்கள் காலை 7:30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் இருப்பதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணி நேரங்களில் இல்லையா, மருத்துவ சேவை குறைகள், அரசு மருத்துவமனையில் லஞ்சம் கேட்கிறார்களா உள்ளிட்ட புகார்கள் இருந்தால் உடனே பொதுமக்கள் 104க்கு தகவல் தெரிவிக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.
- காற்று, நிலம், நீர் மாசுபடாமல் ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து காற்று, நீர், நிலம் மாசுபடாத உற்பத்தி என்ற தரச்சான்று அவசியம்.
திருப்பூர்:
புதிதாக ஏற்படுத்தப்ப ட்டுள்ள சர்வதேச ஜவுளி கொள்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. காற்று, நிலம், நீர் மாசுபடாமல் ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிபந்தனை முக்கியமானது.கொரோனாவுக்கு பிறகு இயற்கை மாசு ஏற்படுத்தாத பசுமை சார் உற்பத்தி என்ற அங்கீகார தரச்சான்று இருக்கும் ஆடைகளையே வெளிநாட்டு மக்கள் வாங்கி அணிகின்றனர்.
திருப்பூரில் இயங்கும் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம், சாய ஆலைகள், பிரின்டிங் ஆலைகளும் புதிய அங்கீகார தரச்சான்று பெற வேண்டியது கட்டாயமாகி விட்டது. கிரீன் டேக் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. தற்போது கார்பன் கிரெடிட் என்ற சான்றும் அவசியமாகிறது.சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள் பயன்படுத்தும் இங்க் மற்றும் ரசாயனத்தின் தன்மை, இயற்கைக்கு கேடு விளைவிக்காத ஒன்றாக இருக்க வேண்டும். அதற்காக கார்பன் கிரெடிட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.குறிப்பிட்ட நாடுகளில் கார்பன் கிரெடிட் சான்றிதழ் இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் வர்த்தகம் செய்ய முடியும். இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என பல்வேறு நாட்டு மக்களும் விரும்புகின்றனர். ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் திருப்பூர் அவர்களின் தேர்வாக இருக்கிறது. இனிவரும் நாட்களிலும் ரசாயன பயன்பாடு, இங்க் பயன்பாடு உள்ளிட்ட பணிகளிலும் அங்கீகார தரச்சான்று பெற்றிருக்க வேண்டியதும் அவசியமாகி யுள்ளது.
இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், பல்வேறு வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அதன்படி அங்கீகார தரச்சான்று பெற்றிருந்தால் மட்டுமே வர்த்தகம் செய்கின்றனர். தூய ரசாயனம் - தூய செயலாக்கம் - தூய தயாரிப்பு என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்து கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து காற்று, நீர், நிலம் மாசுபடாத உற்பத்தி என்ற தரச்சான்று அவசியம்.
அதற்காக அடல் இன்குபேஷன் மையம் உதவியுடன் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தரச்சான்று நிறுவனங்களை தேர்வு செய்து பயன்படுத்தலாம் என்றார்.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- பொதுமக்களிடையில் இருந்து 579 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர்உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 579 மனுக்களை பெற்று கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சி யில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி மற்றும் ஓ.எம்.எஸ். மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டர் இணைந்து இம்முகாமை நடத்துகிறது.
- ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம் நாளை 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2மணி வரை நடைபெறுகிறது.
திருப்பூர்:
ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி மற்றும் ஓ.எம்.எஸ். மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டர் சார்பில் இலவச எலும்பு மற்றும் மூட்டு நோய் ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம் நாளை 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2மணி வரை திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவு ஓ.எம்.எஸ். மருத்துவமனையில் நடக்கிறது.
இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த் கலந்து கொள்கிறார். ஓ.எம்.எஸ்.மருத்துவமனை நிறுவனர் ரவிசந்திரன் , ரோட்டரி சங்க நிர்வாகி டாக்டர் அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
முகாமில் 40 வயதை கடந்த ஆண்கள் மற்றும் பெண்கள், மாத விலக்கு நின்ற பெண்கள், நிரந்தர கை, கால், வலி உள்ளவர்கள், நிரந்தர முதுகு வலி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்வோருக்கு இலவசமாக ரூ.1500 மதிப்புள்ள எலும்பு அடர்த்தி சோதனை செய்யப்படும். முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 81100 71747 என்ற செல்போன் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், சிவக்குமார், ரங்கநாதன், இளையராஜா மற்றும் செந்தில்குமார், சண்முக சுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
- பனங்கள் ஒரு தடை செய்யக்கூடிய போதை பொருள் அல்ல.
- ஒரு மரத்துக்கள்ளை 48 நாட்கள் தொடர்ந்து பருகி வந்தால் பல நோய்கள் குணமாகும்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பனங்கள் ஒரு தடை செய்யக்கூடிய போதை பொருள் அல்ல. பாரம்பரியமான உணவு பொருளான கள் இறக்குவதற்கும், பருகுவதற்கும் அரசு விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். ஒரு மரத்துக்கள்ளை 48 நாட்கள் தொடர்ந்து பருகி வந்தால் பல நோய்கள் குணமாகும். எனவே தான் கள்ளுக்குத் தடை கூடாது என்கிறோம்.
கேரளாவை பின்பற்றி தமிழ்நாட்டிலும், மதுவிலக்கு மற்றும் மதுக்கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். 2023-24-ம் ஆண்டுக்கான மதுக்கொள்கையை முடிவு செய்வதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஜூலை 25-ந்தேதி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் 'கள்' இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் முக்கியத்துவம் அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்பனை ஆகாமல் மீதமாகும் கள்ளை வீணாக்காமல், அதிலிருந்து வினிகர் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பொருட்களையும் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. கள்ளுக்கடைகளை திறக்க கோருவதுவும், கள்ளுக்கு அரசிடம் அனுமதி கேட்பதுவும் அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 47-க்கு எதிரானதுடன் கள்ளுக்கடைக்கு தடை விதிக்கக்கூடாது.
இவற்றை முன்னிறுத்தி வருகிற ஜனவரி மாதம் 21-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 'கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூா்:
திருப்பூா் மாவட்டத்தில் சுற்றுலா விருதுக்குத் தகுதியான தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் அறிவிப்பின்படி ஒவ்வோா் ஆண்டும் சுற்றுலாத் தொழில்முனைவோருக்கு சுற்றுலா விருது வழங்குவதற்கான வழிகாட்டுதல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை உலக சுற்றுலா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
இந்த விருதுகளானது சுற்றுலா ஆபரேட்டா்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோரும் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை https://tntourismawards.com/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வரும் ஆகஸ்ட் 15 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாலப்பம்பட்டி, தேவனூா்புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
- நாளை 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
உடுமலை
உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி, தேவனூா்புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
பாலப்பம்பட்டி துணை மின் நிலையம்: உடுமலை காந்தி நகா், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பாா்க், ெரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனூா், குரல்குட்டை, மடத்தூா், மலையாண்டிபட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூா், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், வீரசோழபுரம்.
தேவனூா்புதூா் துணை மின் நிலையம்: தேவனூா்புதூா், செல்லப்பம்பாளையம், கரட்டூா், ராவணாபுரம், ஆண்டியூா், சின்னபொம்மன்சாளை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூா், அா்த்தநாரிபாளையம், புங்கமுத்தூா்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் போஷன் அபியான் திட்டத்தின் சார்பாக தாய்பால் வார விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் கீழ் போஷன் அபியான் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதாகும். குழந்தையின் முதல் 1000 நாட்கள் அதாவது தாயின் வயிற்றில் கரு உருவானது முதல் இரண்டு வயது வரையிலான நாட்களே அந்த குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கிறது. முதல் 1000 நாட்களில் குழந்தையின் முக்கிய உணவு தாய்ப்பால்,குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அளிக்க வேண்டிய அவசியம் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை இத்திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தாய்ப்பாலூட்டலை சாத்திய மாக்குவோம்,பணிபுரியும் தாயின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம் என்ற தலைப்பின் கீழ் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்பாலின்முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் போஷன் அபியான் சார்பாக கண்காட்சி அரங்குகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் பாலூட்டும் தாய்மார்கள் உண்ண வேண்டிய உணவுகள்,தாய்மார்கள் பாலூட்டும் முறை பற்றிய விளக்கக்காட்சி, தாய்ப்பாலின் நன்மைகள்,தானிய கலசம், உணவு பிரமிடு, கீரை வகைகள், ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சி திட்டப்பணிகளால் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு, சத்துமாவினால் செய்யக்கூடிய உணவுகள், சத்துமாவு கேக், சத்துமாவு உள்ளடக்கிய பொருட்கள், இரும்புச்சத்து தேர், கால்சியம் வீடு, வளர்ச்சிப்படிகள்,காய்கறிகளால் செதுக்கப்பட்ட வடிவங்கள், முதல் 1000நாட்களின் முக்கியத்துவம் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.
இதனை அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் போஷன் அபியான் ஜன் அந்தோலன் கீழ் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான சமையல் போட்டி மற்றும் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தலுக்கான போட்டி அனைத்து வட்டாரங்களிலும் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாரட்டுச்சான்றிதழ்கள் வழங்ப்பட்டது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
முன்னதாக உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி தாய்ப்பாலூட்டலை சாத்தியமாக்குவோம், பணிபுரியும் தாயின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம் என்ற தலைப்பில் அங்கன்வாடி பணியாளர்களது பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட திட்ட அலுவலர் ஸ்டெல்லா மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தாம்பரம் - எர்ணாகுளம் வருகிற 24-ந்தேதி முதல் செப்டம்பர் 9ந்தேதி வரை வியாழன் தோறும் இயக்கப்படும்.
- ஆகஸ்டு 25-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை இந்த ெரயில் இயங்கும்.
திருப்பூர்:
ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் (எண்:06053) வருகிற 24-ந்தேதி முதல் செப்டம்பர் 9ந்தேதி வரை வியாழன் தோறும் இயக்கப்படும். மதியம் 3 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் ரெயில் மறுநாள் காலை 3:30மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.
எர்ணாகுளத்தில் புறப்படும் ெரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். மறுமார்க்கமாக எர்ணாகுளம் - தாம்பரம் ரெயில் (எண்: 06504) வெள்ளிதோறும் காலை 8:30மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 11:15மணிக்கு தாம்பரம் சென்று சேரும். ஆகஸ்டு 25-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை இந்தரெயில் இயங்கும்.
இந்த ரெயில்களில் ஒரு முதல் வகுப்பு ஏ.சி., 2 இரண்டாம் வகுப்பு ஏ.சி., தலா 6 ஏ.சி., மற்றும் படுக்கை வசதி, 2 பொது பெட்டிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பார்த்தீனியத்தின் களைகளை மக்குவதற்காக 45 முதல் 60 நாட்கள் வரை விட வேண்டும்
- செடியினை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி பார்த்தீனிய செடிகளின் பாதிப்பினை முற்றிலுமாக கட்டுப்படுத்தலாம்.
உடுமலை:
பார்த்தீனியத்தை கொண்டு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
பூ பூக்கும் முன் தேவையான பார்த்தீனிய களைகளை சேகரித்து அவற்றை 5 முதல் 10 செ.மீ., நீளவாக்கில் சிறிதாக நறுக்கி 10 செ.மீ., சுற்றளவில் கீழிருந்து 5 செ.மீ., உயரத்தில் அவற்றை அடுக்க வேண்டும். இவற்றின் மேல் 10 சதவீதம் மாட்டு சாண கரைசலை கொண்டு சமமாக தெளிக்க வேண்டும். இவற்றை 10 நாட்கள் மக்குவதற்காக விட வேண்டும். 5 நாட்கள் கழித்து 250 முதல் 300 மண் புழுக்களை மக்கிய உரத்தில் விட வேண்டும். மேலும் பார்த்தீனியத்தின் களைகளை மக்குவதற்காக 45 முதல் 60 நாட்கள் வரை விட வேண்டும். பார்த்தீனிய மண்புழு உரத்தை தொழு உரமாக பயன்படுத்தலாம்.
இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியன அடங்கியுள்ளன. பார்த்தீனிய செடியானது அனைத்து தரப்பு உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதால் இதை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கிய பணியாகும். இச்செடியினை சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி பார்த்தீனிய செடிகளின் பாதிப்பினை முற்றிலுமாக கட்டுப்படுத்தலாம்.
பார்த்தீனிய விழிப்புணர்வு வாரம் இம்மாதம் 16-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது என வேளாண்துறையினர் தெரிவித்தனர்.
- 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து மையத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
- விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் வேகத் தடை அமைக்க வேண்டும்
திருப்பூர்:
பல்லடம் வழியாக செல்லும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் முதல் காரணம்பேட்டை வரை 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து மையத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கத்துக்குப் பின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் காளிவேலம்பட்டி பிரிவு அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ஒருசில விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் வேகத் தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.






