என் மலர்
திருப்பூர்
- நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
- திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.
அவிநாசி:
அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின்கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.
இதில், மின்நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி தெரிவித்துள்ளாா்.
- ஒளிா் மஞ்சள் நிறத்தில் தோன்றி காலப்போக்கில் விலா எலும்புகள்போல காட்சியளிக்கும்.
- பயிரினை பாதுகாத்திடவும் வேண்டும் என்றாா்.
திருப்பூர்:
பல்லடம் அருகே பொங்கலூரில் தென்னை வாடல் நோய் குறித்து வேளாண்மை அலுவலா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பொங்கலூா் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், திருப்பூா் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா்கள், வேளாண்மை அலுவலா்கள், துணை வேளாண்மை அலுவலா்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா்கள் கலந்து கொண்டனா். வாணி வரவேற்றாா்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிா் நோயியல் துறை பேராசிரியா் ஜான்சன், தென்னை மரத்தை தாக்கும் அடித்தண்டு வாடல் நோய் மற்றும் தென்னை வோ் வாடல் நோய் குறித்து பயிற்சியளித்தாா்.
வாடல் நோய் தாக்கப்பட்ட தென்னை மர மட்டையின் நடு அடுக்குகள் ஒளிா் மஞ்சள் நிறத்தில் தோன்றி காலப்போக்கில் விலா எலும்புகள்போல காட்சியளிக்கும். பின்னா் பூங்கொத்து கருகுதல் நடுக்குருத்து அழுகுதல் போன்ற அறிகுறிகளுடன் தென்னை மரங்கள் காய்ந்து மகசூல் பாதிக்கும். இந்த வாடல் நோய் கண்ணாடி இறக்கை பூச்சி (ஸ்டெபானிடிஸ் டிபிகா), தத்துப்பூச்சி (புரோடிஸ்டாமோயஸ்டா) ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. இப்பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பம் பிண்ணாக்கு பவுடா் 200 கிராம் அல்லது பிப்ரோனில் 0.3ஏ குருணையை மணலுடன் 1:1 என்ற விகித்தில் கலந்து குருத்தின் அடிப்பகுதியில் இடவேண்டும் என தெரிவித்தாா்.
தென்னையில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிா் நோயியல் துறை பேராசிரியா் மருதாசலம் பேசியதாவது:-
ஒரு மரத்துக்கு ஓா்ஆண்டுக்கு வேப்பம் பிண்ணாக்கு 5 கிலோ, யூரியா 1.3 கிலோ, சூப்பா் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஸ் 3.5 கிலோ என்ற அளவில் இட வேண்டும். தென்னை டானிக் 40 மில்லி, 160 மில்லி தண்ணீருடன் கலந்து வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை கட்ட வேண்டும். மேலும் உயிரியல் காரணிகளான டி-விரிடி 100 கிராம், பேசிலஸ் 100 கிராம், அசோஸ்பைரில்லம் 100 கிராம், பாஸ்போ பாக்டீரியா 100 கிராம் மற்றும் வோ் உட்பூசனம் 50 கிராம் ஆகியவற்றை 5 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து வருடத்துக்கு ஒரு மரத்துக்கு இரண்டு முறை இட வேண்டும். மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உற்பத்தி செய்யப்படும் கோகோகான் என்ற நுண்ணுயிா் கலவையை ஒரு ஏக்கருக்கு 5 லிட்டா் அளவில் 2-3 மாத இடைவெளியில் தென்னையில் வோ்ப்பகுதியில் ஊற்ற வேண்டும் என்றாா்.
திருப்பூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் சுருளியப்பன் பேசுகையில், மாவட்டத்தின் பிரதான பயிராக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருவதால் தொழில்நுட்ப அலுவலா்கள் அனைவரும் பயிற்சியில் தெரிவிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி தென்னை மகசூல் அதிகரிக்கவும், பயிரினை பாதுகாத்திடவும் வேண்டும் என்றாா்.தென்னையில் வரும் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியா் கலையரசன் தொழில்நுட்ப அலுவலா்களுக்கு பயிற்சியளித்தாா்.
முடிவில் பொங்கலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பொம்மராஜு நன்றி கூறினாா்.
- கோவிந்தசாமிக்கும் அவரது மகன் நடராஜனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
- நெஞ்சில் காயம் ஏற்பட்டதில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் முத்தையம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்த சாமி (வயது 86). விவசாயியான இவருக்கு சாமிநாதன் (60), நடராஜ் (55) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கோவிந்தராஜ்க்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் உள்ளது. மேலும் கோவிந்தசாமிக்கும் அவரது மகன் நடராஜனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் இன்று காலை கோவிந்தசாமி தனது தோட்டத்தில் வளர்ப்பு மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இருந்து விழுந்த 2 தேங்காய்கள் சாக்கடையில் கிடந்தன.
அதனை எடுத்த கோவிந்தசாமி, எதிரே உள்ள தோட்டத்திற்குள் வீசி உள்ளார். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த மகன் நடராஜனின் மனைவி ஈஸ்வரி (50), பேத்தி லாவண்யா (25) ஆகியோர் அடுத்தவர் தோட்டத்திற்குள் எதற்காக தேங்காயை வீசினாய் என தகாத வார்த்தைகளால் பேசினர்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஈஸ்வரி, லாவண்யா ஆகியோர் கீழே கிடந்த கல் மற்றும் தேங்காயை எடுத்து கோவிந்தசாமி மீது வீசினர் . இதில் நெஞ்சில் காயம் ஏற்பட்டதில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஈஸ்வரி, லாவண்யா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். லாவண்யா பல்லடத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயியை மருமகள் மற்றும் அரசு பெண் அதிகாரி கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மஸ்தூா் ஐஐ என்ற பதவிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 582 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாள் ஒன்றுக்கு ரூ. 380 பெற்று வருவதுடன் பணி நிரந்தரம் செய்யவும் மறுத்து வருகின்றனா்.
திருப்பூர்:
மின்வாரியத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மஸ்தூா் ஐஐ., என்ற பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளா் முன்னேற்ற கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக மின்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, எரிசக்தி துறை செயலாளா் பீலா ராஜேஷ் ஆகியோருக்கு கூட்டமைப்பின் மாநில இணைப்பொதுச் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழக மின்வாரியத்தில் இல்லாத மஸ்தூா் ஐஐ., என்ற பணியிடங்களை மின்வாரியம் உருவாக்கி தகுதியற்றவா்களைப் பணியில் அமா்த்தி தாங்கள் விரும்பும் நபரை பணியில் சோ்க்கத் திட்டம் தீட்டி உள்ளதாகத் தெரிகிறது. மஸ்தூா் ஐஐ என்ற பதவிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 582 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் குறைந்த ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 380 பெற்று வருவதுடன் பணி நிரந்தரம் செய்யவும் மறுத்து வருகின்றனா். இந்த நிலையில் தற்போது புதிதாக சென்னை மத்திய மின் பகிா்மான வட்டத்தில் 14 க்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கு தலா 4 மஸ்தூா் ஐஐ பணியிடங்களுக்கான வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளா்களையும் தோ்தல் வாக்குறுதியின்படி பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடைகளுக்கு செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
- சந்தை வளாகத்தில் சுகாதார வளாகமும் ஏற்படுத்தவில்லை.
உடுமலை:
உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு நாள்தோறும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள், பழங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இது தவிர மலைப்பகுதியில் விளையக் கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய், உருளை மற்றும் சேனைக்கிழங்கு , நெல்லிக்காய் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதால் குறைவான விலையில் நிறைவான தரத்தில் புத்தம் புதிதாக காய்கறிகள் கிடைக்கிறது.
இதனால் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
அதற்கு தகுந்தவாறு உழவர் சந்தை வளாகத்தில் கடைகளுக்கு செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாத தால் நடைபாதை முற்றிலும் சேதமாகி உள்ளது. அவற்றை சீரமைப்பதற்கும் அதிகாரிகள் முன் வரவில்லை. இதனால் சந்தைக்கு வருகின்ற பொதுமக்கள்- விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் சந்தை வளாகத்தில் சுகாதார வளாகமும் ஏற்படுத்தவில்லை.
இதனால் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்ற விவசாயிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதற்கு உண்டான கோரிக்கையை விடுத்தும் இன்று வரையிலும் நிலுவையில் உள்ளது.
எனவே முதல் கட்டமாக உழவர் சந்தை வளாகத்தில் சேதம் அடைந்த பாதையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
- சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நேற்று நீர்மட்டம் 36. 74 அடியாக இருந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் நீர் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இவற்றிற்கு 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
காண்டூர் கால்வாயில் நடைபெற்ற புனரமைப்புபணி நிறைவடைந்ததை அடுத்து பரம்பிக்குளம் அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 72 கோடி மதிப்பில் காண்டூர் கால்வாயில் ஏற்பட்ட பழுதுகள் சமீபத்தில் நீக்கப்பட்டதோடு நீர்க்கசிவுகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு பக்கவாட்டு சுவர்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பரம்பிக்குளம் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் உடைப்பு, நீர் கசிவு இன்றி திருமூர்த்தி அணையை வந்து அடைந்தது .இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நேற்று நீர்மட்டம் 36. 74 அடியாக இருந்தது. அணைக்கு 821 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 23 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில் 4 மண்டல பாசனத்திற்கு ஒரு சுற்று தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை விரைந்து செல்வது குறித்தும் தண்ணீர் திருட்டை தடுப்பது குறித்தும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அணையில் இருந்து அனேகமாக வருகிற 15-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படலாம் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
- நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தை வீதியை சேர்ந்தவர் மரகதம் (55). இவரது கணவர் முத்துசாமி. இவர்களுக்கு ஒரு மகனும். ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணம் ஆகி வெளியூர்களில் உள்ளனர். முத்துசாமி இறந்து விட்டார். மரகதம் மட்டும் அதே பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மூதாட்டியிடம் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய மரகதம் தனது கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை கழற்றி அந்த வாலிபர்களிடம் கொடுத்துள்ளார்.
நகையை வாங்கியதும் அந்த வாலிபர்கள் தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்து ஓடி விட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மரகதம் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அவர்கள் தங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நூதன முறையில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வனத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் யானைகள் மூணாறு சாலையை கடந்து செல்ல தொடங்கி உள்ளன.
- வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலையில் அமராவதி ஒன்பதாறு சோதனைச்சாவடியில் இருந்து சின்னாறு வரை சாலையின் இருபுறமும் அமராவதி உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள், உள்ளன.
உடுமலை வனச்சரகத்தில் இருந்து அவ்வப்போது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம். கோடை காலத்தில் யானைகள் இடம் பெயர்வது அதிக அளவில் இருக்கும்.
மழைக்காலங்களில் வனத்திலேயே குளம், குட்டைகளில் தண்ணீர் கிடைப்பதால் யானைகள் சாலையை கடந்து செல்வது குறைவாக இருக்கும் .பெரும்பாலும் ஒன்பதாறு - சின்னார் சோதனைச்சாவடிக்கு இடையில் உள்ள 13 கிலோமீட்டர் தூரத்தில் ஏழுமலையான் கோவில் பிரிவு, காமனூத்துப்பள்ளம், புங்கனோடை ஆகியவை யானைகள் இடம்பெயரும் முக்கிய வழித்தடமாக உள்ளன.
மேலும் யானைகள் செல்லும்போது சாலையில் சிறிது நேரம் நின்று செல்கின்றன. தற்போது மழை பொழிவு குறைவு காரணமாக வனத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் யானைகள் மூணாறு சாலையை கடந்து செல்ல தொடங்கி உள்ளன. தற்போது ஒன்பதாறு - சின்னார் சோதனைச்சாவடிக்கு இடையே சின்னாறு பகுதியில் சாலையோரம் குட்டியுடன் பெண் யானை ஒன்று உலா வருகிறது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் , குட்டியுடன் பெண் யானை நிற்பதால் வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. ஒலி எழுப்பக்கூடாது. வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேதாராம் என்பவர் காரில் வேகமாக வந்ததாக தெரிகிறது.
- தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லேகவுண்டம்பாளையம் கூனம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாம்ராஜ்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேதாராம் என்பவர் காரில் வேகமாக வந்ததாக தெரிகிறது.
அவர் வந்த கார், ராமசாமி மீது பயங்கரமாக மோதியதாக தெரிகிறது. இதில் கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே இதுகுறித்து தகவல் அறிந்த அவருடைய மகன் வெள்ளியங்கிரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமசாமியை ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவரை பரிசோதித்தகே டாக்டர்கள் ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து கேதாராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 100 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்
- கரும்பு முருங்கை ரூ. 8 முதல் ரூ.10 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். நேற்று 100 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 4 முதல் 5 வரைக்கும், மரம் முருங்கை ரூ.4 முதல் 5 வரைக்கும், கரும்பு முருங்கை ரூ. 8 முதல் ரூ.10 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து தெரிவித்தார்.
- வீடுகளுக்கு கழிவுநீர் கால்வாயின் வழியாக குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
- கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அம்மன் நகரில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்குள்ள வீடுகளுக்கு கழிவுநீர் கால்வாயின் வழியாக குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் குடிநீர் குழாய் இணைப்பு மாற்றப்படவில்லை.
இந்த நிலையில் குடிநீர் குழாயில் ஏதேனும் உடைப்பு ஏற்பட்டால் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து செல்லக்கூடிய அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
- இலவச திருமணத்தை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடத்தி வைத்தார்.
வெள்ளகோவில்:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் இன்று காலை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில் வளாகத்தில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார்.
பின்னர் மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமாங்கல்யம், பீரோ, கட்டில், மணமக்கள் ஆடை, மெத்தை, தலையணை, மிக்சி ஆகிய சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மணமக்களின் உறவினர்களுக்கு விருந்து வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன், துணைச்செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர் செந்தில்குமார், செயல் அலுவலர்கள் ராமநாதன், திலகவதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில், மேட்டுப்பாளையம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.






