search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abolish"

    • மஸ்தூா் ஐஐ என்ற பதவிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 582 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • நாள் ஒன்றுக்கு ரூ. 380 பெற்று வருவதுடன் பணி நிரந்தரம் செய்யவும் மறுத்து வருகின்றனா்.

    திருப்பூர்: 

    மின்வாரியத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மஸ்தூா் ஐஐ., என்ற பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளா் முன்னேற்ற கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழக மின்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, எரிசக்தி துறை செயலாளா் பீலா ராஜேஷ் ஆகியோருக்கு கூட்டமைப்பின் மாநில இணைப்பொதுச் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    தமிழக மின்வாரியத்தில் இல்லாத மஸ்தூா் ஐஐ., என்ற பணியிடங்களை மின்வாரியம் உருவாக்கி தகுதியற்றவா்களைப் பணியில் அமா்த்தி தாங்கள் விரும்பும் நபரை பணியில் சோ்க்கத் திட்டம் தீட்டி உள்ளதாகத் தெரிகிறது. மஸ்தூா் ஐஐ என்ற பதவிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 582 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் குறைந்த ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 380 பெற்று வருவதுடன் பணி நிரந்தரம் செய்யவும் மறுத்து வருகின்றனா். இந்த நிலையில் தற்போது புதிதாக சென்னை மத்திய மின் பகிா்மான வட்டத்தில் 14 க்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கு தலா 4 மஸ்தூா் ஐஐ பணியிடங்களுக்கான வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளா்களையும் தோ்தல் வாக்குறுதியின்படி பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் இருந்து உம்ரா யாத்திரை செய்ய வரும் பக்தர்களுக்கான வரியை ரத்து செய்ய சவுதி அரேபியா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. #umra #umratax #saudiumrathax
    இஸ்லாமாபாத்:

    இஸ்லாம் தோன்றிய புனித பூமியான சவுதி அரேபியா மற்றும் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் அந்த மார்க்கத்துடன்  தொடர்புடைய சில புனிதஸ்தலங்களும், முஹம்மது நபியின் மகள், பேர பிள்ளைகள் மற்றும் சில கலிபாக்களின் நினைவிடங்களும் அமைந்துள்ளன.

    இந்த இடங்களை பார்வையிட்டு தங்களது காணிக்கைகளை செலுத்தும் நோக்கத்தில் உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் யாத்திரையைப்போல் கடமையாக்கப்படா விட்டாலும் ‘உம்ரா’ என்றழைக்கப்படும் இந்த யாத்திரை சிலரது விருப்பத்தேர்வாக உள்ளது.

    எந்த மாதத்திலும் இப்படி உம்ரா செய்யவரும் யாத்ரிகர்களுக்கு இந்நாடுகள் ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாகவும், நுழைவு கட்டணமாகவும் வசூலித்து வருகின்றன.

    குறிப்பாக, சவுதி அரேபியா நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு இடையில் ஒருமுறைக்கு மேல் உம்ரா செய்யவரும் வெளிநாட்டு யாத்ரிகர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரியால்கள் உம்ரா வரியாக வசூலிக்கப்படுகிறது. 

    இந்த ஆண்டில் இதுவரை சுமார் 4 லட்சத்து 21 ஆயிரம் வெளிநாட்டு யாத்ரிகர்கள் உம்ரா செய்வதற்காக சவுதி அரேபியா வந்துள்ளனர். இவர்களில் சுமார் 82 ஆயிரம் பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். 

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், தனது முதல் வெளிநாட்டு பயணமாக சமீபத்தில் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றார்.

    சவுதி மன்னர் சல்மானை சந்தித்த இம்ரான் கான் தங்கள் நாட்டினருக்கான உம்ரா வரியை ரத்து செய்யுமாறு கேட்டு கொண்டார். இதனை ஏற்ற சவுதி அரசு உம்ரா வரியை ரத்து செய்துள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் அறநிலையத்துறை இன்று தெரிவித்துள்ளது. #umra #umratax #saudiumrathax
    புதுவையில் கஞ்சா விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது. அதை போலீஸ் துறையினர் ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார். #Narayanasamy

    புதுச்சேரி:

    புதுவையில் போலீஸ் துறை 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் உதய தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 1-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 55-வது உதயதினம் இன்று கோரிமேடு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார். அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    பல மாநிலங்களில் குற்றங்கள் நடந்தால் அவற்றை கண்டுபிடிப்பதற்கு பல ஆண்டுகள், பல மாதங்கள் ஆகிறது. புதுவையை பொறுத்தவரை குற்றம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடிக்கும் சக்தி இங்குள்ள போலீசுக்கு உள்ளது.

    கடந்த காலங்களில் நகை பறிப்பு, நிலம் அபகரிப்பு, தொழில் உரிமையாளர்களை மிரட்டுதல், பட்டபகலில் கொலை என்ற நிலை இருந்தது. இன்று காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சட்டம்-ஒழுங்கை காப்பதில் முதன்மையான மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளோம்.

    போலீஸ் துறையை முடுக்கி விட்டதன் மூலம் கொலை குற்றம், நில அபகரிப்புகள் போன்றவற்றை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக சிறப்பாக செயல்பட்ட போலீஸ் தலைமை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அடகு கடை உரிமையாளர் கொலை வழக்கு, ஏ.டி.எம். கும்பல் கைது போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

    ஆட்சிக்கு வந்த 2½ ஆண்டில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கும் மாநிலம் என்ற விருதை நாம் பெற்றுள்ளோம். இப்போது சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகிறார்கள். சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான் அவர்களின் வருகை அதிகரித்து இருக்கிறது.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு வியாபாரிகள் சங்கத்தினர் கூட்டம் நடத்தினார்கள். அவர்கள் புதுவையில் ஒட்டுமொத்தமாக மாமுல் தொல்லை ஒழிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்கள். இதற்கு போலீஸ் நடவடிக்கை தான் காரணம்.

    கஞ்சா, லாட்டரி, போதை பொருள் விற்பது போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளோம். கஞ்சா விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது. அதை போலீஸ் துறையினர் ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஸ்பெ‌ஷல் பிராஞ் போலீசார் தங்கள் திறமையை காட்ட வேண்டும். போலீசாரின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டி.ஜி.பி. சுந்தரி நந்தா பேசியதாவது:-

    புதுவையில் சட்டம்- ஒழுங்கை சிறப்பாக காத்து வருவதால் தான் சுற்றுலா வளர்ச்சி பெறுகிறது. ஆனால் காவல் துறையினரின் இந்த செயல்பாட்டை புரிந்து கொள்ளாமல் சிலர் தவறான எண்ணங்களை உருவாக்கி வருகிறார்கள்.

    புதுவை வளர்ச்சிகாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் போலீசாருக்கு எப்போதும் துணை நிற்போம்.

    இவ்வாறு கூறினார்.

    விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முத்தியால்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணன் மற்றும் போலீஸ் துறையை சேர்ந்த பினாபரமேல், வரதராஜ பெருமாள், ஜெனிபர், ஷீஜேஷ், சுஜித், ஜித்தேஷ், சங்கர், நரேந்திரன், நாகராணி, ஏழுமலை, சுந்தரலிங்கம், ரிஜேஷ்குனில், குக்கலதுர்காபிரசாத் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருதுகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

    ×