என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய கட்டிடம் இன்று திறப்பு விழா நடந்தது.
    • ஏற்பாடு–களை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா வாராப்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வாராப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த பள்ளியில் புதிய பள்ளி கட்டிடத் திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. ராம.சின்னம்மாள் நினைவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கி பள்ளி நூலகத்தை திறந்து வைக்கிறார்.

    முன்னதாக விழாவுக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் என்.சேதுராமன் முன்னிலை வகித்து பேசுகி–றார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலை–வர் டாக்டர் எஸ்.குருசங்கர் சிறப்புரையாற்றுகிறார். மேலும் இந்த விழாவில் பள்ளிக்கல்வி அதிகாரிகள், டாக்டர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கி–றார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    • நெற்குப்பையில் ஆனிமாத சப்பர திருவிழா நடந்தது.
    • மாற்று சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வழி நெடுகிலும் மெழுகுவத்திகளை ஏந்தியவாறு வழிபட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை பேரூராட்சியில் அமைந்துள்ள திருமுழுக்கு யோவானின் பெருவிழா என்னும் சப்பரத் திருவிழா நடைபெற்றது.

    ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவ பெருமக்களால் ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதேபோல் இந்த ஆண்டும் இத்தேவ ஆலயத்துக்கு பாத்தியப்பட்ட சிங்கம்புணரி பங்குத்தந்தை ஜெயசீலன் உள்ளிட்ட மூன்று பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து வண்ண, வண்ண விளக்குகளில் இயேசு கிறிஸ்து, மேரி, குழந்தை மேரி உள்ளிட்ட சிலைகளுடன் நகரின் முக்கிய விதிகளில் வலம் வந்தது. மாற்று சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வழி நெடுகிலும் மெழுகுவத்திகளை ஏந்தியவாறு வழிபட்டனர்.

    • அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை சூரக்குடி நகரத்தார்கள் செய்தி ருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடியில் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் சமஸ்தானம் தேவஸ் தானத்துக்குட்பட்ட செகுட்டு அய்யனார், சிறை மீட்ட அய்யனார், படைத் தலைவி அம்மன் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

    விழா கடந்த ஜூன் 23-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக சுமார் 30-க்கும் மேற்பட்ட குயவர்கள் புரவிகள் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பிரம்மாண்ட 2 அரண்மனை புரவிகள் உட்பட 282 புரவிகள் சாமி யாட்டத்துடன் சூரக்குடி புரவி பொட்டலுக்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு நடந்தது.

    நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்று ஊர் அம்பலகாரர்கள் முன்னிலையில் 282 புரவிகள் ஊர்வலம் நடந்தது.

    இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றார். இதில் நகரத்தார் தலைவர் மாதவன் கணே சன், சிவசுப்பிரமணியன், வெள்ளையப்பன், வெங்கடாசலம் காந்திமதி சிவகுமார், ஆனந்த கிருஷ்ணன், தொழிலதிபர் தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சூரக்குடி நகரத்தார்கள் செய்தி ருந்தனர்.

    • இருதய ஆண்டவர் தேவாலய தேர்பவனிவிழா நடந்தது.
    • இன்று 8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாம துரை அருகே இடைக்காட்டூரில் பிரபலமான திருஇருதய ஆண்டவர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின்

    129-வது ஆண்டு திருவிழா கடந்த 30-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோணி முஸ் கொடியேற்றி வைத்து திருப்பலி நடத்தினார். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மாலையில் இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் வெவ்வேறு தலைப்புகளில் மறையுரை வழங்கப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார மின்விளக்கு தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது, திரு இருதய ஆண்டவர் சொரூபம் தாங்கிய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் ஆலயத்தைச் சுற்றி உள்ள வீதிகளில் வலம் வந்தது.

    முன்னதாக காலை ஆயர் (பொறுப்பு) ஸ்டீபன் அந் தோணி, திருவிழா திருப்பலி யையும், மாலையில் முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் திருவிழா நிறைவு திருப்பலியையும் நடத்தினர். இன்று 8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

    • செட்டிநாடு கால்நடை பண்ணையில் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் சென்று பார்வையிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் செட்டிநாடு ஊராட்சியில் உள்ள கால்நடைப் பண்ணையில் 150 ஏக்கர் பரப்பளவில், கால்நடைகளுக்கு தேவையான கால்நடை தீவனம் மரங்கள் மற்றும் 600 மாடுகள், 1100 ஆடுகள், 1,258 அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வளர்க்கப்படு கின்றன.

    இதற்காக அமைக்கப்பட்டுள்ள கால்நடை கொட்டகைகள், கன்றுக் கொட்டகைகள், பால் கறவைக்கூடம், ஆட்டுக்கொட்டகைகள், கோழிக் கொட்டகைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் சென்று பார்வையிட்டார்.

    மேலும் செட்டிநாடு மாவட்ட கால்நடைப் பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்கப் பண்ணை உருவாக்குதல், தீவன ஆலை அமைத்தல் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்தல் திட்டத்தின்கீழ் 13.81 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.

    பண்ணையில் பராமரிக்கப்பட்டு வரும் செம்மறி ஆடுகள் ஜமுனாபாரி இன வெள்ளா டுகள் ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கி டவும், தார்பார்கர், சாகிவால் இன மாடுகளின் பால் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, கால்நடை பராமரிப்புத் துறையின் துணை இயக்குநர் (கூ.பொ) பாலசுப்பி ரமணியன், கால்நடை உதவி மருத்துவர்கள் நட்ராஜன், பிரபாகரன், விவசாய மேலாளர் இதயத்துல்லா உட்பட சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 கோவில்களில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.
    • ரூ.1 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் விட்டனேரி கொல்லங்குடி வெட்டுடையார் காளி யம்மன் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இந்து சமய சிவகங்கை மண்டல இணை ஆணையர் பழனிகுமார் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

    மணமக்களுக்கு ரூ.1 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் குத்துவிளக்கு பீரோ, தலையணை, சமையல்பாத்திரங்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், பொதுக்குழு உறுப்பினருமான ஏஆர்.ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ஆர்.எம். கென்னடி, யோக கிருஷ்ண குமார், ஆரோக்கியசாமி, கொல்லங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மெய்ஞான மூர்த்தி, மாணவர் அணி கார்த்தி, பால்பாண்டி, குட்டி, தமிழ்ச்செல்வன், சுசீந்திரன், வழக்கறிஞர் சதீஷ், செல்லப்பாண்டி, பாலமுருகன், அசோக், முருகன், அல்லூர் ரவி, காளை மணி, அம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கோவில் செயல் அலுவலர் நாராயணி நன்றி கூறினார். தாயமங்கலம் முத்துமாரி அம்மன்கோவிலில்ஒரு ஜோடிக்கும், அரியக்குடி திருவேங்கடம் உடையார் கோவிலில் 3 ஜோடி களுக்கும், பரமக்குடியில் திரவுபதி அம்மன் கோவிலில் 3 ஜோடிகளுக்கும் மொத்தம் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    அரியக்குடி திருவேங்கடமுடையார் கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் மாங்குடி எம்.எல்.ஏ., காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணைத் தலைவர் குணசேகரன், கண்ணன், காரை சுரேஷ் அறங்காவலர் குழு உறுப்பினர் வெள்ளையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத்தலைவர் பாண்டித்துரை இல்ல திருமண விழா நடக்கிறது.
    • நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் காரைக்குடி பி.எல்.பி பேலஸ் திருமண மகாலில் நடக்கிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் வேலங்குடி சோலைமலையான் வீட்டை சேர்ந்த சோ.கரு.துரைராஜ்-சுசீலா தம்பதியரின் இளைய மகனும், பாரதீய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணை தலைவர், தொழிலபதிபர் து.பாண்டித்துரையின் சகோதரருமான சோ.கரு.து.கார்த்திகேயன் மணமகனுக்கும், பள்ளத்தூர் கோடியான் வீடு கோ.வெ.சபாரெத்தினம்-சாந்தி தம்பதியரின் மகளுமான ச.தாரணி மணமகளுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.

    இவர்களது திருமணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் காரைக்குடி பி.எல்.பி பேலஸ் திருமண மகாலில் நடக்கிறது. பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    இதில் முன்னாள் தேசிய செய லாளர் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிரணி தலைவி வானதிசீனிவாசன், மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாநில பொதுச்செய லாளர்கள் அ.பி.முருகா னந்தம், ராம சீனிவாசன், எம்.முருகானந்தம், பொன்.வி.பாலகணபதி, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    திருமண விழாவில் மாநிலம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். திரும ணத்திற்கான ஏற்பாடுகளை து.பாண்டித்துரை, கோட்டையூர் பேரூராட்சி கவன்சிலர் பா.திவ்யா தம்பதியினர் மற்றும் பள்ளத்தூர் சபா ரெத்தினம்-சாந்தி தம்பதி யினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் டிரைவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் விருதுநகரை சேர்ந்த சிவா என்பவர் ஜே.சி.பி. டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்ைல. இதுகுறித்து அவரது மனைவி மாதா கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை அருகே உள்ள முலாக்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமரன். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது31). இவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் இருந்து ராஜேஸ்வரி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்புவனம் தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையம் செயல்படவில்லை.
    • இதனால் பொது மக்கள் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வளர்ந்து வரும் பேரூராட்சி ஆகும். இதனை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு முக்கிய ஊராக விளங்கி வருகிறது. இங்கு பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோவில் உள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி திருப்புவனத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட திருப்பு வனம் பேரூ ராட்சியில் நாள்தோறும் ஆதார் கார்டு விண்ணப்பம், பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு பொதுமக்கள் தபால் நிலையத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு வந்தனர்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக திருப்புவனம் தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட வில்லை. இதனால் பொது மக்கள் மாணவ-மாணவி கள் கடும் அவதியடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஊர்களுக்கும் அல்லது வேறு சேவை மையங்க ளுக்கும் சென்று ஆதார் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    திருப்பு வனம் தபால் நிலையத்தில் ஆதார் மையத்தை செயல்படுத்தி கூடுதலாக அஞ்சல் அலுவலர்களை நியமித்து கூடுதல் நேரத்தில் செயல்பட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கலைஞர் நூற்றாண்டு பூங்காவை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • பூங்காவிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக இப்பேரூராட்சி பகுதியில் வளர்ச்சி பணி களை மேற்கொள்ளும் பொருட்டு, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா ஒன்றும், பூங்காவிற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மேலும் இப்பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதி களில் மக்களுக்கும் கூடுதல் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் பொருட்டு அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணி களுக்கென ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், விவசாய பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பல்வேறு வகையான கடனு தவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.விழாவில் திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியினை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி 211 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 52 ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் ஜூனு, சிவகங்கை சரக துணைப்பதிவாளர் பாலசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, திருப்புவனம் பேரூ ராட்சி தலைவர் சேங்கை மாறன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, பேரூராட்சி துணை தலை வர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி செயல் அலு வலர் ஜெயராஜ் மற்றும் 1-வது வார்டு உறுப்பினர் செல்வி ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • வருகிற ஆகஸ்டு 10-ந்தேதிக்குள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள பாது காப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு சரி பார்க்கும் எந்திரங்கள் ஆகியவைகளின் முதல்நிலை சரிபார்ப்பு பணியினை கலெக்டர் ஆஷா அஜித் அங்கீகரிக் கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்கு சரிபார்க்கும் எந்தி ரங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரப்பெற்றுள்ளன.

    இந்த எந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய-மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு பெட்டக அறையில் உள்ள 2670 பேலட் யூனிட், 1936 கன்ட்ரோல் யூனிட் 2088 வி.வி.பேட் எந்திரங்களில் முதல் நிலை சரிபார்க்கும் பணியினை பெல் நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள் மேற்கொள்கின்றனர்.

    இப்பணியானது வருகிற ஆகஸ்டு 10-ந்தேதிக்குள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சில் வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா தேவி, தேர்தல் வட்டாட்சியர் மாணிக்க வாசகம், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • போதை ஆசாமிகளால் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவதில்லை.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை- சிவகங்கை பிரதான சாலையில் திரு மணவயல் கிராமம் உள்ளது. இங்குள்ள கோவில் எதிரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வரும் குடிமகன்களால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.போதை ஆசாமிகளால் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவதில்லை. பள்ளி கல்லூரி, மாணவிகள் ரோட்டில் செல்லும் பொழுது மது பிரியர்களின் அச்சுறுத்தல் உள்ளது.மேலும் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

    எனவே கோவில் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

    இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×