என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • திருப்புவனம் தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையம் செயல்படவில்லை.
    • இதனால் பொது மக்கள் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வளர்ந்து வரும் பேரூராட்சி ஆகும். இதனை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு முக்கிய ஊராக விளங்கி வருகிறது. இங்கு பிரசித்தி பெற்ற மடப்புரம் காளியம்மன் கோவில் உள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி திருப்புவனத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட திருப்பு வனம் பேரூ ராட்சியில் நாள்தோறும் ஆதார் கார்டு விண்ணப்பம், பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு பொதுமக்கள் தபால் நிலையத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு வந்தனர்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக திருப்புவனம் தபால் நிலையத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட வில்லை. இதனால் பொது மக்கள் மாணவ-மாணவி கள் கடும் அவதியடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஊர்களுக்கும் அல்லது வேறு சேவை மையங்க ளுக்கும் சென்று ஆதார் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    திருப்பு வனம் தபால் நிலையத்தில் ஆதார் மையத்தை செயல்படுத்தி கூடுதலாக அஞ்சல் அலுவலர்களை நியமித்து கூடுதல் நேரத்தில் செயல்பட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கலைஞர் நூற்றாண்டு பூங்காவை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • பூங்காவிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக இப்பேரூராட்சி பகுதியில் வளர்ச்சி பணி களை மேற்கொள்ளும் பொருட்டு, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா ஒன்றும், பூங்காவிற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மேலும் இப்பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதி களில் மக்களுக்கும் கூடுதல் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் பொருட்டு அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டு பணி களுக்கென ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், விவசாய பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பல்வேறு வகையான கடனு தவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.விழாவில் திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியினை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.16.52 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி 211 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 52 ஆயிரம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் ஜூனு, சிவகங்கை சரக துணைப்பதிவாளர் பாலசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, திருப்புவனம் பேரூ ராட்சி தலைவர் சேங்கை மாறன், மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, பேரூராட்சி துணை தலை வர் ரகமத்துல்லாகான், பேரூராட்சி செயல் அலு வலர் ஜெயராஜ் மற்றும் 1-வது வார்டு உறுப்பினர் செல்வி ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • வருகிற ஆகஸ்டு 10-ந்தேதிக்குள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள பாது காப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு சரி பார்க்கும் எந்திரங்கள் ஆகியவைகளின் முதல்நிலை சரிபார்ப்பு பணியினை கலெக்டர் ஆஷா அஜித் அங்கீகரிக் கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்கு சரிபார்க்கும் எந்தி ரங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரப்பெற்றுள்ளன.

    இந்த எந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய-மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு பெட்டக அறையில் உள்ள 2670 பேலட் யூனிட், 1936 கன்ட்ரோல் யூனிட் 2088 வி.வி.பேட் எந்திரங்களில் முதல் நிலை சரிபார்க்கும் பணியினை பெல் நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள் மேற்கொள்கின்றனர்.

    இப்பணியானது வருகிற ஆகஸ்டு 10-ந்தேதிக்குள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சில் வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா தேவி, தேர்தல் வட்டாட்சியர் மாணிக்க வாசகம், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • போதை ஆசாமிகளால் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவதில்லை.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை- சிவகங்கை பிரதான சாலையில் திரு மணவயல் கிராமம் உள்ளது. இங்குள்ள கோவில் எதிரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வரும் குடிமகன்களால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.போதை ஆசாமிகளால் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல முடிவதில்லை. பள்ளி கல்லூரி, மாணவிகள் ரோட்டில் செல்லும் பொழுது மது பிரியர்களின் அச்சுறுத்தல் உள்ளது.மேலும் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

    எனவே கோவில் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

    இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மதகுபட்டி நாடக மேடை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • இளைஞர் இளம்பெண் பாசறை துணை செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டி ஊராட சிக்குட்பட்ட உச்சபுளிப் பட்டி கிராமத்தில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் நாடக மேடை அமைக்கப் பட்டுள் ளது. இதனை எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. செயலாளருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்த னர்.

    இதில் சிவகங்கை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கருணாகரன், மாவட்ட கவுன்சிலர் தேவராஜ், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் செந்தில் முருகன், மதகுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் சங்கர் ராமநாதன், மாவட்ட விவசாய பிரிவு துணைச்செயலாளர் சீனிவாசன் இளைஞர் இளம்பெண் பாசறை துணை செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்பட்டது.
    • மிளகாய் சாகுபடி செய்ய 50 சதவீதம் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    இளையான்குடி வட்டா ரம் தோட்டக்கலைத்துறை த் துறையில் தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ் காய் கறி நாற்றுகள், பழக்கன்றுகள் சாகுபடி செய்யவும் மழை நீர் சேமிக்க பண்ணைக் குட்டை அமைக்கவும், மற் றும் விவசாய உரங்கள் இயற்கை உரங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இத்திட்டத்தில் நடப்பாண்டில் புதிய திட்ட மாக விவசாய நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி விவசாய நிலமாக மாற்றி மிளகாய் சாகுபடி செய்ய 50 சதவீதம் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது.

    விவசாயம் செய்ய ஏது வாக நுண்ணீர் பாசன கருவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்கூரிய திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் தங்களது பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைபடத்துடன் இளையான்குடி யூனியன் அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகுமாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாண்டிய ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • போக்குவரத்து விதி மீறிய தனியார் பஸ் டிரைவர்- கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தேவகோட்டை போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை-திருப்பத் தூர் சாலையில் ஒத்தக்கடையில் இருந்து ராம்நகர் வரை மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவல கங்கள், நீதிமன்றங்கள் உள்ளன. இதனால் இந்தபகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பஸ் நிறுத் தங்களை போலீசார் சில மாற்றங்களை செய்தனர். மேலும் நகர் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன் ஆகியோர் சாலையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அவ்வப் போது அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்த சாலையில் தனியார் பஸ்கள் அதிவேகமாக வரு வதாகவும், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவ தில்லை எனவும் புகார்கள் வந்ததன் அடிப்படையில் ராம்நகரில் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன், ஏட்டு யோகராஜா ஆகியோர் சோதனை நடத்தினர்.

    அப்போது போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் இயக்கப்பட்ட தனியார் பஸ்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் டிரைவர்கள், கண்டக்டர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • தேவகோட்டையில் நகர் மன்ற கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது.
    • நகராட்சியில் இடைத்தரகர்கள் முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் தெரிவித்தார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகராட்சி கூட்டரங்கில் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரமேஷ், முன்னிலை வகித்தார். மேலாளர் ராஜேஷ்வரன் அனைவரையும் வரவேற்றார்.

    துணைத்தலைவர் ரமேஷ் பேசுகையில் அரசு ஒதுக்கீடு செய்த எல்.இ.டி லைட்கள் பல நாட்கள் ஆகியும் இன்னும் அதன் பணி நடைபெறாமல் இருப்பது ஏன் என்றார்.

    ஓவர்சீஸ் எல்.இ.டி லைட் பொருத்தும் பணி இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    தலைவர் சுந்தரலிங்கம் எல்.இ.டி லைட்கள் பொருத் தம் பணியை விரைவு படுத்த வேண்டும் என அதி காரியிடம் கேட்டுக் கொண்டார். கவுன்சிலர் முத்தழகு பேசுகையில் கருதாவூரணி கடந்த காலங்களில் நகராட்சி மூலம் மீன்கள் வளர்க்கப் பட்டு அவை குத்தகைக்கு விடப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது கழிவுநீரால் ஊரணி மாசு அடைந்துள்ளது.

    தலைவர் சுந்தரலிங்கம் கடந்த நகர மன்ற கூட்டத்தில் கருதாவூரணி சுத்தம் செய்யப்பட்டு பழைய பயன் பாட்டுக்கு கொண்டு வரப் படும். கவுன்சிலர் அய்யப் பன் ஆணையாளர் பொறி யாளர் பணியிடம் காலியாக உள்ளது. நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்படு கிறது. தலைவர் சுந்தரலிங்கம் நகராட்சியில் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதை தீர்மானங்கள் ஏற்றி அனைவரும் உயர் அதிகாரிகளை சந்திப்போம்

    துணைத்தலைவர் ரமேஷ் மாநகராட்சிகளை விட இங்கு வரி விதிப்பு அதிகமாக உள்ளது. வரி விதிப்பு மண்டலங்களை மறு ஆய்வு செய்து வரி விதிப்பு செய்ய வேண்டும். மேலும் இடைத்தரகர்கள் நகராட்சியில் அதிகரித்து வருகிறது என்றார். தலைவர் சுந்தரலிங்கம் நகராட்சியில் இடைத்தரகர்கள் முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக் கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இலவச தையல் எந்திரங்கள், ஒரு பயனாளிக்கு ரூ.5000 மதிப்பிலான ஆடை தேய்ப்பு பெட்டி வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது. பொது மக்களிடமிருந்து 351 மனுக்கள் பெறப்பட்டு தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் வருவாய் துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் விபத்து நிவாரண காசோலை, 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.87 ஆயிரத்து 500- மதிப்பீட்டில் இயற்கை மரண உதவிதொகை காசோலைகள், முதல்-அமைச்சர் பொது நிவாரன நிதியின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகள், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,000 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்கள், ஒரு பயனாளிக்கு ரூ.5000 மதிப்பிலான ஆடை தேய்ப்பு பெட்டி, தொழிலாளர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.55 ஆயிரம் வீதம் விபத்து மற்றும் இயற்கை மரண உதவித் தொகை காசோ லைகள் என மொத்தம் 27 பயனாளி களுக்கு ரூ.15 லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடந்தது.
    • கூட்டுறவுத்துறை அமைச்சர், முன்னாள் அமைச்சர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டம் காரைக்குடி 5 விளக்கு அருகே நடைபெற்றது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் தொண் டரணி அமைப்பா ளர் ஹேம லதா செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்து துரை, நகர செயலாளர் குண சேகரன், மகளிரணி நிர்வாகிகள் குழந்தை தெர சாள், திவ்யா சக்தி, ராஜேஸ் வரி சேகர், சங்கீதா செல்லப் பன், மஞ்சரி லெட்சுமணன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் சிறப்புரையாற்றினர். முனை வர் எழிலரசி, தலைமை பேச்சாளர் புவியரசி ஆகி யோர் பெண்கள் முன் னேற்றத்திற்கு கலைஞர் ஆற்றிய பணிகள் குறித்து பேசினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ் ரூசோ, மணிமுத்து, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மானா மதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி உள்பட ஒன்றிய, நகர, பேரூர் கிளை செயலாளர்கள், மகளிரணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் மணி மேகலை நன்றி கூறினார்.

    • திருப்பத்தூரில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும்.
    • ஊராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் தலைமை வகித்தார். ஆணையாளர் அருள் பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் பரணபாஸ் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் ரமேஷ் பிரசாத் வரவேற்றார்.

    உதவியாளர் மாணிக்க ராஜ் செலவு கணக்கு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றிய குழு துணைத் தலைவர் மீனா வெள்ளைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், சுமதி, ஜெயபாரதி, கலைமகள், சகாதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில் கவுன்சிலர்கள் ராமசாமி, பழனியப்பன், கலைமாமணி ஆகியோர் பேசியதாவது:-

    வேலங்குடி ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பில் போர் போடப்பட்டு தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் எந்தவித பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் விநியோகிக்க முடியவில்லை. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

    கடங்கண்மாய் பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கவுன்சிலர்களின் பெயர்களை இடம்பெற செய்ய வேண்டும். பொது மக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிைறவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி தலைவர் மற்றும் சேர்மன் ஆகியோர் உறுதி கூறினர்.

    • தேவகோட்டையில் மாற்றுத்திறனாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • கடன் பிரச்சினையில் இந்த விபரீத சம்பவம் நடந்தது.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே அடசிவயல் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகநாதன் (வயது36). இவர் கட்டுமான பணிக்கு தேவை யான பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு திருப்பத்தூர் சாலையில், ஸ்டேட் பேங்க் வீதி அருகே உள்ள செல்போன் கடை முன்பு நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு நல்லாங்குடியை சேர்ந்த பாண்டி மகன் மணிகண்டன் (30), புதுக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் காளீஸ்வரன் (31) ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வாள், அரிவாளால் நாகநாதனை வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் தலை, கைகள் மற்றும் கால் பகுதியில் நாகநாதனுக்கு காயம் ஏற்பட்டது. ரத்த காயத்துடன் கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மணிகண்டன் டாக்சி டிரைவராகவும், காளீஸ்வரன் கடை மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்தி வருவதாகவும் தெரியவந்தது.

    மேலும் காளீஸ்வரனிடம் தொழில் தேவைக்காக நாகநாதன் பல தவணை களில் ரூ.60 ஆயிரம் கடன் பெற்றதும், அதில் ரூ.40 ஆயிரம் திருப்பி கொடுத்த நிலையில் ரூ.20 ஆயிரம் திருப்பிக் கொடுக்க வேண்டியுள்ளதும் தெரியவந்தது. கடன் பிரச்சினை காரணமாக நாகநாதனை அவர்கள் வெட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மற்றும் காளீஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×