search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய கட்டிடம் இன்று திறப்பு-அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு
    X

    ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய கட்டிடம் இன்று திறப்பு-அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய கட்டிடம் இன்று திறப்பு விழா நடந்தது.
    • ஏற்பாடு–களை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா வாராப்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வாராப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த பள்ளியில் புதிய பள்ளி கட்டிடத் திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. ராம.சின்னம்மாள் நினைவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கி பள்ளி நூலகத்தை திறந்து வைக்கிறார்.

    முன்னதாக விழாவுக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் என்.சேதுராமன் முன்னிலை வகித்து பேசுகி–றார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலை–வர் டாக்டர் எஸ்.குருசங்கர் சிறப்புரையாற்றுகிறார். மேலும் இந்த விழாவில் பள்ளிக்கல்வி அதிகாரிகள், டாக்டர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கி–றார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×