என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானத்தில் இன்று மதுரை வருகிறார்.
    • என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசுகிறார்.

    காரைக்குடி:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானத்தில் இன்று(வியாழக்கிழமை) மதுரை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு புறப்படுகிறார். மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் பா.ஜனதா மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகிறார்.

    மாலை 4.45 மணி முதல் 5.30 மணி வரை மகளிர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசுகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7.45 மணிக்கு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மகாலில் பகல் 11 மணிக்கு பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சோழன் சித.பழனிசாமி, பா.ஜனதா கட்சி மாநில பொறுப்பாளர் ரவி, துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய மந்திரி முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை பா.ஜனதா. சிவகங்கை மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • காரைக்குடியில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    • வீட்டிற்குள் முருங்கை மரம் விழுந்தது தொடர்பான பிரச்சினையில் செல்வி மகன் பாலாஜி மற்றும் சிலர் மகாலிங்கத்தை தாக்கினார்களாம்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் அசோக் நகர் பகுதியில் வசிப்பவர் மகாலிங்கம் (வயது 55). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வி (42) என்பவருக்கும் வீட்டிற்குள் முருங்கை மரம் விழுந்தது தொடர்பான பிரச்சினையில் செல்வி மகன் பாலாஜி மற்றும் சிலர் மகாலிங்கத்தை தாக்கினார்களாம். இதுகுறித்து கடந்த 11-ந் தேதி வடக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் செல்வி, பாலாஜி மற்றும் சிலர் மீது வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டபிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வழக்கில் தொடர்பில்லாத பொறியியல் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் (20) மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து கைது செய்ததை எதிர்த்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தை 

    • இளையான்குடி பேரூராட்சியில் விழிப்புணர்வு சுவர் ஓவியம் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
    • பிளாஸ்டிக் தீமைகள் பற்றியும் மஞ்சள் பைகள் பயன்பாடு அவசியம் பற்றியும் அழகிய ஓவியங்களுடன் அமைந்துள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் இளையான்குடி பேரூராட்சி உள்ளது. தற்போது பேரூராட்சி அலுவலகம் அருகே குழந்தைகளுக்காக சுற்றுச்சூழல் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகம் அருகில் கிழக்கு பகுதிகளில் உள்ள பெரிய ஊரணி சீரமைக்கப்பட்டு தற்போது பெய்தமழையால் நிரம்பி ரம்மியமாக காணப்படுகிறது.

    இவற்றை பாதுகாக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சி அலுவலக சுற்றுச்சுவர் மற்றும் தனியார் சுவர்களில் அனுமதி பெற்று மழைநீரின் அவசியம் பற்றியும், முழுசுகாதாரத்தை கடைபிடிக்கவேண்டியும், பிளாஸ்டிக் தீமைகள் பற்றியும் மஞ்சள் பைகள் பயன்பாடு அவசியம் பற்றியும் அழகிய ஓவியங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுவர் ஓவியம் வரையப்பட்டு உள்ளது.

    இதற்கான முயற்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முழுசுகாதாரத்தை வழியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்களுடன் செய்து வரும் பிரசாரம் பொதுமக்களிடேயே பாராட்டை பெற்று இளையான்குடி பேரூராட்சி நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

    • திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (22-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர் மற்றும் மல்லாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கை செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் குழந்தைகளுக்கான கலை போட்டிகள் நடந்தது.
    • பாட்டு, மாறுவேடம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டி என 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

    காரைக்குடி

    காரைக்குடி செல்ல ப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளி மற்றும் காரைக்குடி சிட்டி லயன்ஸ் சங்கம் இணைந்து, 2 முதல் 6 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தியது.

    பாட்டு, மாறுவேடம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டி என 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலுள்ள பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மொத்தம் 72 வகையான பரிசுகள் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவுக்கு பள்ளியின் தாளாளர் சத்தியன் தலைமை தாங்கினார். காரைக்குடி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் மாவட்ட கவர்னர் ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் ராணி போஜன் வரவேற்றார். பள்ளியின் கல்வி அதிகாரி டாக்டர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். காரைக்குடி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் கேபினட் செயலாளர் பாதம் பிரியன், மாவட்ட லியோ தலைவர் மதிவாணன், மண்டலத்தலைவர் முத்துகுமார், ஜோன் தலைவர் முத்துகண்ணன், பொருளாளர் லட்சுமணன், செயலா ளர் பழனிவேல், பிரெ சிடெண்ட் சண்முகசு ந்தரம், லியோ செயலாளர் தீப்ஷா, ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சாகிர் உசேன் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.
    • நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது. முதல்வர் அப்பாஸ் மந்திரி, தாவரவியல் துறைத்தலைவர் அஸ்மத்து பாத்திமா, துணைமுதல்வர் ஜஹாங்கிர், விலங்கியல் துறைத்தலைவர் ஆபிதீன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி பேசினர். தமிழ்த்துறை தலைவர் இப்ராஹிம் நன்றி கூறினார். நிகழ்வில் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.

    • சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கராத்தே பயிற்சி முகாம் நடந்தது.
    • இந்த முகாமை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட கராத்தே சங்கம் சார்பில் சிறப்பு கட்டா பயிற்சி முகாம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் ருக்மா சரவணன் தலைமை தாங்கினார்.காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மதுரையில் இருந்து வருகை புரிந்த பிளாக் பெல்ட் 3-வது டான் பயிற்சியாளர் தன நாராயண பிரபு குழுவினர், சிறப்பு பயிற்சி அளித்தனர். இதில் சிவகங்கை மாவட்ட கராத்தே சங்க நிர்வாகிகள் வீரசேகர், தியாகராஜன், சிரஞ்சீவி, சந்தீப், அயயாரு, சண்முகவேல், கஸ்பாரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழை ஜே.சி.ஐ. காரைக்குடி கிங்ஸ் இயக்க தலைவர் ராஜீவ் வழங்கினார்.சங்க செயலாளர் சென்டாய் சுகுமார் நன்றி கூறினார்.

    • காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி திறப்பு விழா நடந்தது.
    • போட்டி மிகுந்த கல்வியாக சட்டக்கல்வி திகழ்கிறது என விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு சட்டக்கல்லூரிகாரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    அதை அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, சட்டத்துறை செயலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி வரவேற்றார்.

    இதில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அன்று நான் டெல்லியிலிருந்து சிவகங்கையை பார்க்கிறேன் என்று சொன்னார். இன்று சிவகங்கையில் இருந்து கொண்டு டெல்லியையும் பார்க்கிறார். சிவகங்கையையும் பார்க்கிறார். சிவகங்கை மண்ணுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற பணியாற்றி வருவது, அவரை விட நாங்கள் இன்னும் உற்சாகத்தோடு பணியாற்ற வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறது. காரைக்குடிக்கு சட்டக்கல்லூரி வந்திருப்பதற்கு முழு காரணம் ப.சிதம்பரம்தான்.

    என்னுடைய மாவட்டத்திற்கு கொண்டு வர முடியாவிட்டாலும் பக்கத்து மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளோம். நல்ல கல்லூரி கிடைக்க வேண்டும் என்றால் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். மதிப்பெண்கள்தான் மதிப்பை உயர்த்தும். இல்லையென்றால் பெற்றோரின் பர்சுதான் காலியாகும். அரசு கல்லூரியில் 10 ஆயிரம் ரூபாயில் படிப்பை முடித்து சென்று விடலாம். ஸ்காலர்ஷிப் இருந்தால் அந்த பணமும் திரும்ப கிடைத்து விடும். தனியார் கல்லூரியில் பல லட்சங்களை செலவு செய்ய வேண்டிவரும். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான படிப்பு சட்ட படிப்பு என்றார்.

    அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மாணவர்கள் அனைவரும் தரமான கல்வி பெற வேண்டும் என்ற அடிப்படையில் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சட்டக்கல்லூரியின் தேவை அத்தியாவசியமானதாக திகழ்கிறது.

    பொறியியல், மருத்துவ படிப்புக்கு இணையாக சட்ட படிப்பும் முக்கிய அங்கம் வகிக்கிறது. இக்கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது, என்றார்.

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் காரைக்குடியில் புதிய அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15-வது அரசு சட்டக்கல்லூரியான இதில் 80 இடங்கள் ஒதுக்கப்பட்டு முதல் கவுன்சிலிங் முடிந்து முதல் கட்டமாக 22 மாணவர்கள் குறிப்பாக சிவகங்கை, புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் இன்று சேர்ந்துள்ளனர்.

    போட்டி மிகுந்த கல்வியாக சட்டக்கல்வி திகழ்கிறது. சட்ட கல்வி பயின்ற பெண்கள் அதிக அளவில் நீதிபதிகளாக உள்ளனர். இதுபோன்று இன்னும் புதிதாக பல்வேறு கல்லூரிகள் இந்த ஆட்சியில் தொடங்கப்பட வேண்டும்.

    விரைவில் கட்டிடப் பணிகள் முடிந்து அதன் திறப்பு விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க விரும்புகிறேன் என்றார்.

    கார்த்தி சிதம்பரம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, தமிழரசி ஆகியோரும் பேசினர்.

    அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கார்த்திக்சோலை, சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் மற்றும்

    உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழில் வணிக கழகத்தினர், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், தி.மு.க.- காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். கல்லூரின் தனி அலுவலர் ராமபிரான் ரஞ்சித்சிங் நன்றி கூறினார்.

    • கணவன்-மனைவி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
    • நாகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் ராமச்சந்திரனை ஒரு அறையில் தள்ளி பூட்ட முயன்றனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ராக்கம்மாள் உள்பட 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராக்கம்மாளுக்கும், கோட்டையூர் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமச்சந்திரன் (34) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது நாகப்பன் மகள் வீட்டுக்கு சென்று சமரசம் செய்து வைப்பது வழக்கம். ஆனாலும் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ராக்கம்மாளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். சம்பவத்தன்று ராமச்சந்திரன் மனைவியை பார்க்க மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது கணவன்-மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த நாகப்பன், மருமகனை சமரசம் செய்ய முயன்றார். அப்போது வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து நாகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் ராமச்சந்திரனை ஒரு அறையில் தள்ளி பூட்ட முயன்றனர். இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அந்த அறையில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மாமனார் நாகப்பன் மீது சுட்டார். இதில் அவரது கழுத்துக்கு கீழ் குண்டு பாய்ந்தது.

    படுகாயம் அடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் தேவகி வழக்குப்பதிவு செய்து மாமனாரை துப்பாக்கியால் சுட்ட ராமச்சந்திரனை தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் மாமனாரை மருமகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இளையான்குடி வேதாந்த மடத்தில் குருபூஜை விழா நடந்தது.
    • இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள வேதாந்த மடத்தில் சிவானந்த ஞான தேசிக சுவாமிகளின் 49-வது ஆண்டு நிறைவு குருபூஜை விழா நடந்தது. இளையான்குடி வேதாந்த மடத்தை தோற்றுவித்த சிவானந்த ஞான தேசிக சுவாமிகளின் ஜீவ சமாதி இங்கு உள்ளது.

    இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். சிவானந்த ஞான தேசிக சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், சொர்ண அபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இளையான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.

    • சுப்பையா அம்பலம் பள்ளியில் ஓசோன் தின விழா நடந்தது.
    • பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி பாரிநகர் சுப்பையா அம்பலம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஓசோன் தினம் மற்றும் தாத்தா -பாட்டி தினம் நடைபெற்றது. தாளாளர் சுப.துரைராஜ் தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி ராஜேஸ்வரி ஜெகதீசன் முன்னிலை வகித்தார். ஓசோன் தின விழாவில் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் மூலம் மரக்கன்றுகள் பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் நடப்பட்டன.

    தாத்தா-பாட்டி தின விழாவில் மாணவர்கள் தங்களது தாத்தா-பாட்டி களுக்கு பாதபூஜை செய்து அன்பையும், மரி யாதையையும் வெளிப்ப டுத்தினார்கள். தாத்தா-பாட்டிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் தலைமையாசிரியர் ராம சுப்பிரமணியன், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பிறந்தநாள் விழா நடந்தது
    • திராவிட கட்சியை தமிழகத்தில் உருவாக்கியவர் அண்ணா.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் நடந்தது. இதையொட்டி ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட அவை தலைவர் ஏ.வி.நாக ராஜன் தலைமையில் மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    விழாவில் பேசிய மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், திராவிட கட்சியை தமிழகத்தில் உருவாக்கியவர் அண்ணா. தமிழகம் மட்டுமல்லாது உலகம் எங்கும் தமிழர்களின் புகழை ஓங்க செய்தவர் அண்ணா. சுயநலம் இல்லாமல் கட்சிக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அவர் அர்ப்பணித்தார். அவரின் வழியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அ.தி.மு.க.வை உயிரினும் மேலாக கட்டிக் காத்தனர்.

    இந்த கட்சியை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு காப்பாற்ற அண்ணாவின் பிறந்தநாளில் சபதம் ஏற்போம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், சிவமணி, வடிவேல், நகர செயலாளர் இப்ராஹிம் ஷா, மாவட்ட பேரவை இணைச் செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×