என் மலர்
நீங்கள் தேடியது "Ozone Day"
- ஓட்டுனர்கள் அனைவரும் 'நீல நிற உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
- ஓசோன் தினத்தன்று" வீட்டில் ஒரு மரம்" வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
விழுப்புரம்:
மரக்காணம் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் உலக ஓசோன் தினத்தை பெற்றோர்கள் மற்றும் பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரதியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் அனைவரும் 'நீல நிற உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
பள்ளி தாளாளர் அருணாச்சலம் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, புவி வெப்பமய மாதலை தடுக்க மாணவர்கள் அனைவரும் ஓசோன் தினத்தன்று" வீட்டில் ஒரு மரம்" வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளி செயலாளர் பாரதியார் ரவிக்குமார் முன்னிலை யில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஓசோன் படலத்தை பாதுகாப்போம் உறுதி மொழி ஏற்றனர்.
- நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலய வளாகத்தில் சர்வதேச ஓசோன் தினம் நடைபெற்றது.
- இதில் கலந்து கொண்டவர்கள் இயற்கைப் பாதுக்காப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்திச் சென்றனர்.
நாசரேத்:
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் சார்பாக நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலய வளாகத்தில் சர்வதேச ஓசோன் தினம் நடைபெற்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஓசோன் படலத்தின் தன்மைகள் அவற்றுள் ஏற்பட்டுள்ள சேதங்கள், ஓசோன் படலத்தினை காப்பதற்கான வழிமுறைகள் போன்றவைகளை துறையின் இயக்குநர் ஜாண்சாமுவேல் எடுத்துரைத்தார். இதில் பங்கு பெற்றவர்கள் இயற்கையை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
விழாவின் நிறைவில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் இயற்கைப் பாதுக்காப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்திச் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் இயக்குநர் ஜாண் சாமுவேல் செய்திருந்தார்.
- சுப்பையா அம்பலம் பள்ளியில் ஓசோன் தின விழா நடந்தது.
- பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
காரைக்குடி பாரிநகர் சுப்பையா அம்பலம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஓசோன் தினம் மற்றும் தாத்தா -பாட்டி தினம் நடைபெற்றது. தாளாளர் சுப.துரைராஜ் தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி ராஜேஸ்வரி ஜெகதீசன் முன்னிலை வகித்தார். ஓசோன் தின விழாவில் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் மூலம் மரக்கன்றுகள் பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் நடப்பட்டன.
தாத்தா-பாட்டி தின விழாவில் மாணவர்கள் தங்களது தாத்தா-பாட்டி களுக்கு பாதபூஜை செய்து அன்பையும், மரி யாதையையும் வெளிப்ப டுத்தினார்கள். தாத்தா-பாட்டிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் தலைமையாசிரியர் ராம சுப்பிரமணியன், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.






