என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி
- சாகிர் உசேன் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.
- நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது. முதல்வர் அப்பாஸ் மந்திரி, தாவரவியல் துறைத்தலைவர் அஸ்மத்து பாத்திமா, துணைமுதல்வர் ஜஹாங்கிர், விலங்கியல் துறைத்தலைவர் ஆபிதீன் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி பேசினர். தமிழ்த்துறை தலைவர் இப்ராஹிம் நன்றி கூறினார். நிகழ்வில் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.
Next Story






