என் மலர்
சிவகங்கை
- சிவகங்கை மாவட்டம் சிராவயலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
- கல்லல் பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிராவயலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, பாதரக்குடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கம், கீழ பட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கண்டன மாணிக்கம் ஊராட்சியில் 2021-22-ம் ஆண்டிற்கான நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, சிராவயல் ஊராட்சி மன்ற தலைவர் சரோஜாதேவி குமார், பாதரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி மீனா அழகப்பன், கீழ பட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா கார்த்திகேயன், கண்டரமாணிக்கம் ஊராட்சி வளர்ச்சி குழு தலைவர் கே.ஆர்.மணிகண்டன், ஊரக முகமை, வருவாய் துறை அலுவலர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- இதுபோன்று சட்டமன்ற கூட்டத்தையும் பார்வையிட வேண்டும் என்று மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று கிராமசபை கூட்டங்கள் நடந்தன. ஆண்டுதோறும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களை தொடர்ந்து நேற்று உள்ளாட்சி தினத்தை யொட்டி இந்த கூட்டம் நடந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.தமிழக அரசு உத்தரவின்படி. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி கூட்டம் நடந்தது.
இதில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்துதல், பருவமழை முன்னெ ச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி ஊராட்சியில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைத்து சிறந்த ஆட்சியாளராகவும், ஜெயலலிதா போன்றும் உருவாக்க வேண்டும். ஜெயலலிதா 7 மொழிகள் பேசக் கூடியவர்.
அவரை போல் பெண் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொடுக்கப்பட்ட பணிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய கிராம ஊழியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். இதில் மாவட்ட கவுன்சிலர் கோமதி தேவராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி முத்துகுமார் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விட்டனேரி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விட்டனேரியில் இருந்து செல்லும் அய்யம்பட்டிக்கு மெட்டல் சாலை, சாத்தனி பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் சாலை, புதிய அங்கன்வாடி கட்டிடம், உடையவயல் பள்ளியில் சுற்றுவர் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தூய்மை பணியா ளர்களுக்கு ரொக்க பரிசும், மகளிர் குழுக்களுக்கு சால்வையும் அணிவித்து ஊராட்சி மன்ற தலைவர் வரதன் மரியாதை செலுத்தினார். ஊராட்சி செயலாளர் முருகப்பன், தலைமை ஆசிரியர், மகளிர் குழுக்கள், வருவாய் துறை ஒன்றிய அலுவலர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான பெண்களும், அரசு பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
கிராம மக்களின் சார்பில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளுக்கு, அதி காரிகளும், ஊராட்சி மன்ற தலைவரும் பதில் அளித்தனர். இதில் பேசிய மாணவர்கள், கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டது புதிய அனுபவமாக அமைந்த தாகவும், மக்களின் தேவை யும், அதிகாரிகளின் பதிலும் அரசின் நடவடிக்கையை தங்களுக்கு வெளிப்படு த்தியதாகவும் தெரிவித்தனர்.
இதுபோன்று சட்டமன்ற கூட்டத்தையும் பார்வையிட வேண்டும் என்று மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதனை ஏற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வதாக ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து உறுதியளித்தார்.
மேலும் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
வாணியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் புவனேசுவரி சுரேஷ்குமார் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை, மருத்துவ பணியாளர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நகர பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நகர பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. 1-வது வார்டில் நடைபெற்ற நகர பகுதி சபை கூட்டத்திற்கு சிங்கம்புணரி நகர் சேர்மனும் 1-வது வார்டு உறுப்பினருமான அம்பலமுத்து தலைமை தாங்கினார். செயல் அதிகாரி ஜான் முகமது முன்னிலை வகித்தார். இதில் 1-வது வார்டு பொதுமக்கள் திரளான அளவில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பொது மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டு அதற்கான தீர்வுகள் செய்து தருவதாக சேர்மன் அம்பலமுத்து உறுதியளித்தார். அதை தொடர்ந்து அந்த வார்டு பொதுமக்கள் கூறுகையில், அங்கன்வாடி மையம் சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த சமுதாயக்கூடமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மின்சார வசதி கிடையாது. ஆகவே சமுதாய கூடத்தை சிறந்த முறையில் பராமரிப்பு செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும். அப்போது பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து அங்கன்வாடி மையம் உடனடியாக சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி கிராம சபை கூட்டம் நடந்தது.
- கிராமத்தின் பல்வேறு பகுதி மக்களும் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் தலைமையில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) விசாலாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன் முன்னிலை வகித்தனர். பொன்நகர், திருமலை நகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சாலை வசதி மற்றும் தெருவிளக்கு, நியாய விலைக் கடை அமைக்கக்கோரி தலைவரிடம் மனு கொடுத்தனர்.வேளாண்மை உதவி இயக்குநர் சண்முக ஜெயந்தி, வேளாண்துறை சார்ந்த அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறினார். கிராமத்தின் பல்வேறு பகுதி மக்களும் அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.
இலுப்பக்குடி அரசு பள்ளி தலைமையாசிரியர் பேசுகையில், பள்ளிக்கு கணிப்பொறி வாங்கித்தந்த யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் மற்றும் பள்ளி வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை செய்துவரும் தலைவர் வைரமுத்து அன்பரசன் உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவித்ததுடன், பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துதர கோரிக்கை விடுத்தார். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். தலைவர் வைரமுத்து அன்பரசன் பேசுகையில், மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.வடகிழக்கு பருவமழை வர இருப்பதால் அனைத்து பகுதிகளிலும் நீர் தேங்காமல் இருக்கவும், கண்மாய் கரைகளை பலப்படுத்தவும் தேவையானவற்றை செய்து வருகிறோம் என்றார்.
சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் வீரப்பன் நன்றி கூறினார்.
- சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை ஆராய்ச்சி பணிக்கு வழங்கலாம்.
- இந்த தகவலை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வித்துறையின் அரசாணையின் படி சரித்திர, முக்கியமான செய்திகள், ஏடுகள், ஆவணங்கள், ஆகியவற்றை தனியார் அமைப்புகளிடம் இருந்து பெற்று ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசால் உத்திரவிடப்பட்டு உள்ளது.
இந்த மாதிரியான தொன்மையான ஆவண ங்கள் நமது கலாச்சாரத்தை மிகவும் பிரதிபலிப்பதாக இருக்கும். இவற்றினை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ், ஆவணக் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுகள் துறையின் பாதுகாப்பில் வைக்க வேண்டியது அவசியமாகிறது.
மேலும், காலமாற்றத்தினாலும், மனிதனின் அஜாக்கிரதையாலும் இதன் முக்கியத்துவம் கெடாமல், குறையாமல் மின்னணு முறையில் பாதுகாப்பதும் முக்கியமானதாகும்.
இது தொடர்பாக பொது மக்கள், நிறுவனங்களில் வரலாற்று சிறப்பு மிகுந்த ஆவணங்கள் தங்கள் வசம் இருந்தால், சிவகங்கை மாவட்ட கலெக்டருகக்கு தகவல் தெரிவித்து மேற்கண்ட வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை பாது காக்கவும், ஆராய்ச்சிக்கு பயன்படுத்த உதவிடுமாறும் கேட்டு கொள்கிறோம்.
இதுகுறித்த விவர ங்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கலெக்டர் அலுவலகம், சிவகங்கை என்ற முகவாிக்கும், 94450 08149 என்ற கைப்பேசி எண்ணிற்கும், 04575 - 240392 என்ற அலுவலக எண்ணிற்கும் தொடா்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கை அருகே பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
- தொடர் கொள்ளை சம்பவங்களால் சிங்கம்புணரி பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பாலமுருகன் திருப்பதி சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 அரை பவுன் நகை, ரூ. 90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். கொள்ளை சம்பவம் தொடர்பாக சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக சிங்கம்புணரி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமூக விரோதச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. நகை, பணம் பறிப்பு, வழிப்பறி, பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்தல் போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 2 வாரத்திற்குள் சிங்கம்புணரி பகுதியில் 3 கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. சிங்கம்புணரியில் போலீசார் ரோந்து செல்வது வெகுவாக குறைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிங்கம்புணரி காவல்நிலையத்தில் போலீசாரின் எண்ணிக்கையும் குறைவு என்று கூறப்படுகிறது. இதனால் ஊருக்குள் வரும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை.
மாவட்ட எல்லையான சிங்கம்புணரியில் எந்த இடத்திலும் செக்போஸ்ட் இல்லை. கண்காணிப்பு காமிராக்களும் குறைவாகவே உள்ளது. காவல்துறையின் அஜாக்கிரதையால் நிகழும் தொடர் திருட்டு சம்பவங்களால் பெரும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வைகை ஆற்றுப்பாலம் இருளில் மூழ்கியது.
- மின்தடையை சரிசெய்து உடனடியாக மின் விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கீழ்கரை- மேல்கரை பகுதிகளை இணைக்கும் வைகை ஆற்றுபாலத்தில் எப்போதும் போக்குவரத்து இருக்கும். பாலத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாததால் நடைமேடைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்களும் செல்போன் டார்ச் லைட் மூலம் நடந்து செல்கின்றனர். ஒருவாரமாக மானாமதுரை நகர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பின்னர் சரிசெய்யப்படுகிறது. தற்போது வைகைஆற்றில் தண்ணீர் செல்வதால் அதிக அளவில் இரு சக்கர வாகனங்களும், பொதுமக்களும் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரிசெய்து உடனடியாக மானாமதுரை வைகைஆற்றில் மின் விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மராத்தான் போட்டி நடந்தது.
- சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான நேற்று தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான நேற்று தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மினி மராத்தான் நடந்தது. வட்டாட்சியர் சாந்தி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை கலாநிதி தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். அதேபோல் சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை வட்டாட்சியர் சாந்தி தலைமையில் அலுவலக பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர். இதில் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை அருகே உள்ள காமராஜர் காலனியை சேர்ந்தவர் பவானி.
- கடந்த சில வாரங்களாக ஆகாஷ் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள காமராஜர் காலனியை சேர்ந்தவர் பவானி. இவரது கணவர் சித்திரைசாமி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஆகாஷ் (25) என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கோவையில் வசித்து வருகிறார்.
ஆகாஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றியுள்ளார். மேலும் வழிப்பறி, நகை பறிப்பு, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ஆகாஷ் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மானாமதுரை கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஒரு நபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆகாஷ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் பழிக்குப்பழியாக ஆகாஷை கொலை செய்ய சிலர் திட்டமிட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக ஆகாஷ் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். ஒவ்வொரு வாரம் தான் தங்கியிருந்த இடத்தை மாற்றி கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மட்டாகுளத்தில் உள்ள நண்பரின் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் மாடியில் ஆகாஷ் இரவு நேரத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனை அறிந்த எதிர்தரப்பு கும்பல் அவரை கொலை செய்ய திட்டமிட்டது. நேற்று இரவு நண்பர் வீட்டின் மாடியில் ஆகாஷ் படுத்து தூங்கினார். இன்று அதிகாலை அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் சத்தம் இல்லாமல் மாடிக்கு சென்றது. அங்கு தூங்கி கொண்டிருந்த ஆகாஷை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திேலயே இறந்தார். பின்பு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ஆகாஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று காலை தெரியவந்தது. அது குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆகாஷ் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழிக்குப்பழியாக ஆகாஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாலையில் வீ்டு புகுந்து ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காளையார் கோவில் யூனியன் விட்டனேரி ஊராட்சியில் அடிப்படை வசதி செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.
- மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் கோரிக்கை விடுத்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட விட்டனேரி ஊராட்சியில் அடிப்படை வசதி செய்வதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் கோரிக்கை விடுத்தார்.
அவர் கூறுகையில், இந்த ஊராட்சி நிதி பற்றாக்குறையில் இயங்குவதால் மக்கள் பணிகள் உடனே செய்து முடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இன்னும் அடிப்படை தேவைகளே நிறைவேற்றப்படாத எங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு உதவ வேண்டும்.
ஊராட்சிக்கு தேவை யான அடிப்படை வசதி களை செய்வதற்கு கடந்த 1 வருடமாக அரசு நிதி ஒதுக்காததால் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் முடங்கி உள்ளது.ஊராட்சி களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 14-வது நிதிக்குழு மானியம், ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் மற்றும் மாநில நிதிக்குழு மானியத்தை அரசு வழங்குகிறது. இதை கொண்டு பணியாளர் சம்பளம், குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம், தெருவிளக்கு மற்றும் கழிவறை பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகள் செய்யப்படுகிறது.
மழைக்கு முன்பு கிராமத்தில் வாறுகால் வசதி ஏற்படுத்த, சேதமடைந்த சாலைகளை மேம்படுத்த, குடிநீர், சுகாதார பணிகள் உள்பட அடிப்படை வசதிகளை ஊராட்சியில் ெசய்ய அரசு ஒதுக்கீடு வேண்டி பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.
அடிப்படை வசதி செய்வதற்கு நிதி ஒதுக்காததால் சிரமமாக உள்ளது. எனவே நிதி ஒதுக்க வேண்டும்.விட்டனேரி ஊராட்சியில் சாலை மற்றும் திட்டப்பணிகள் கேட்டு கொடுக்கப்படுகின்ற மனுக்கள் நிதி இல்லை என்று திரும்பி வந்துவிடுகிறது. எந்த கட்சியும் சாராத சமூக ஆர்வலரான செயல்படும் நான் மக்களை எப்படி எதிர் கொள்வது என்ற சூழலும் நிலவுகிறது.
எனவே எங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு உதவ வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2-ந்தேதி நடக்கிறது.
- நேர்காணலில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ் (டி.சி) மற்றும் ஆதார்அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தமிழகத்தில் உள்ள ஓசூர் ஆலையில் பணிபுரிய பெண் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த முகாமில் 2020, 2021 மற்றும் 2022 கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற பெண்கள் கலந்து கொள்ளலாம். இதில் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம்.
உடற்தகுதியில் உயரம் குறைந்தபட்சம் 145 செமீ இருக்க வேண்டும். எடை 43 கிலோ முதல் 65 கிலோ வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் வேலைநாடுநர்களுக்கு, 12 நாட்கள் பயிற்சி நிறைவுக்கு பிறகு ரூ.16 ஆயிரம் மாதச்சம்பளத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.
உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நம்பிக்கைக்கு உகந்த மற்றும் பாதுகாப்பான பணிச்சுசூழல் ஏற்படுத்தித் தரப்படும்.
மேலும் பி.எப்., ஹெல்த் இன்சூரன்ஸ் போன்றவை பிடித்தம் செய்யப்படும். விருப்பமுள்ளவர்கள் உயர்கல்வி பயிலும் வசதியும் உண்டு. மேற்காணும் வேலைக்கான நேர்காணல் வருகிற 2-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் சிவகங்கை மன்னர்துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த நேர்காணலில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ் (டி.சி) மற்றும் ஆதார்அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.
விரைந்து மாறி வரும் தொழில் உலகில் பணியாற்றும் பொழுதே பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வாழ்கையில் முன்னேறவும், புதுமைமிகு எந்திரங்களை இயக்கத் தெரிந்து கொள்ளவும், மெய்நிகர் யதார்தத்தின் உதவியுடன் மெருகூட்டும் கல்வி வாய்ப்புகளைப் பெறவும் இது நல்ல வாய்ப்பு ஆகும்.
எனவே,சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடும் பெண்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மு காம் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும்பட்சத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ.1000 உதவித்தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
- அனைத்து வட்டார ங்களிலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தொடர்ந்து நடைபெறும்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் சமுதாய வளை காப்பு விழா நடந்தது.
கா்ப்பிணிப் பெண்க ளுக்கு வளைகாப்பு பொருட்களை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு கா்ப்பிணிப் பெண்ணும் நிலைப்பாட்டை பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் அரசே சமுதாய வளைகாப்பு விழாவை நடத்துகிறது. அதன்மூலம் ஏழை, பணக்காரா் என பாகுபாடின்றி ஒரே நிலையில் அனைத்து மதத்தை சேர்ந்த கா்ப்பிணிப் பெண்களுக்கு இந்த விழாவின் மூலம் 5 வகையான கலவை சாதம், வளையல்கள், பூ மற்றும் பழங்கள் உள்ளிட்ட வளைகாப்பு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 12 வட்டா ரங்களில் உள்ள 43 தொகுதிகளில் மொத்தம் 9 ஆயிரத்து 611 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். அதில் ஒரு தொகுதிக்கு 50 கர்ப்பிணிப் பெண்கள் வீதம் 43 தொகுதிகளில் 2 ஆயிரத்து 150 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற உள்ளது.
அனைத்து வட்டார ங்களிலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தொடர்ந்து நடைபெறும்.
கா்ப்பிணி தாய்மார்கள், கா்ப்பகால மாதம் முதல் தொடங்கி, 10 மாதமும் அரசு மருத்துவமனையில் பதிவு செய்து, சாியான மாதாந்திர பாிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான குழந்தை யைப் பெற்றெடுப்பதுடன், தானும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
அதன்படி, தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயா்தர சிகிச்சை வழங்கப்பட்டு, தற்போது கா்ப்பகால உயிரிழப்பு என்பது முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் 150 கா்ப்பிணி தாய்மா ர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.1000 தொகையை வழங்கினார்.
திருப்பத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கான்முகமது, துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) பரமேஸ்வரி, நெற்குப்பை பேரூராட்சித் தலைவா் புசலான், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலா் தங்கம், திருப்பத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி சேகர், ஹரி சரண்யா, திருப்பத்தூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






