என் மலர்
சேலம்
- மாமாங்கம் பகுதியில் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதம்பி (59) நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகார் படி சூரமங்கலம் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
சேலம்:
சேலம் மாமாங்கம் பகுதியில் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதம்பி (59) நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த லாரி ஒரு வழிப்பாதையில் திரும்பியது.
இதனை கவனித்த அவர் அதில் இருந்த 2 டிரைவர்களையும் திரும்பி போகும்படி கூறினார். அப்போது அவர்களுக்கி டையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த 2 பேரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதம்பியை தாக்க முயன்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகார் படி சூரமங்கலம் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (40), தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- தீபாவளி பண்டிகையையொட்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகளை ெவடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
- அதிக அளவில் பட்டாசு குப்பைகள் தேங்கி உள்ளது. இதில் சேலம் மாநகர பகுதியில் 150 டன் வரை குப்பகைள் தேங்கி உள்ளன.
சேலம்:
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகளை ெவடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையொட்டி மாநகரில் முக்கிய பகுதிகளான அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி, அழகாபுரம், பெரமனூர், சூரமங்கலம், ஜங்சன், அரிசிபாளையம், டவுன், கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, பேர்லேண்ட்ஸ் உள்பட பல பகுதிகளில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.
இதனால் அந்த பகுதிகளில் அதிக அளவில் பட்டாசு குப்பைகள் தேங்கி உள்ளது. இதில் சேலம் மாநகர பகுதியில் 150 டன் வரை குப்பகைள் தேங்கி உள்ளன. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் 1000-த்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் அனைத்து குப்பைகளும் அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்ந்து இன்று காலை ஓமலூரில் இருந்து மாட்டுக்காரன்புதூர் செல்லும் சாலையில் தும்பிப்பாடி ஊராட்சி ஒட்டதெரு பகுதியில் அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இது பற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உப்பு தண்ணீரை குடிப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், எனவே சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
ேபாக்குவரத்து பாதிப்பு
உடனடியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 415 கனஅடியாக குறைந்தது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 415 கனஅடியாக குறைந்தது.
அணையின் நீர்மட்டம் 59.73 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 24.48 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
- கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி மற்றும் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியில் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்த ஒருவர் நகை கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் தீபாவளி சீட்டு நடத்தியும், மேலும்தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் தங்க நகை முதலீடு போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களிடம் லட்சகணக்கில் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடை உரிமையாளர் திடீரென தலைமறைவானார். உரிமையாளர் கடையை திறக்க வராததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் ஏமாற்றம் அடைந்ததால் இதுகுறித்து நேற்று மாலை அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.
இதனிடையே சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கடை பூட்டிய நிலையில் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கடை முன்பு இன்று காலை முதலே திரண்டனர். பின்னர் தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். சிலர் கடை மீது கல்வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் அவர்கள் சமரசப்படுத்தி வருகிறார்கள்.
கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கடையின் உரிமையாளர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கவர்ச்சி திட்டங்கள் மூலம் பல கோடி வசூல் செய்து பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திலும் முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்து உள்ளதால் போலீசார் சபரிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் ராஜூ என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது.
- இந்த கிணற்றில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
சேலம்:
சேலம் வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் ராஜூ என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் வீராணம் போலீசாருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வரைந்து சென்ற தீயணைப்பு துறையினரும், போலீசாரும் இணைந்து கிணற்றில் பிணமாக கிடந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தொழிலாளி போல இருந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசி சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அய்யனார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் ஸ்ரீதரன். இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.
- கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து ஸ்ரீதரன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அய்யனார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் ஸ்ரீதரன். இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து ஸ்ரீதரன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஸ்ரீதரன் வீடு திரும்பாத நிலையில் அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை நரசிங்கபுரம் பகுதியில் இருந்து தென்னங்குடி பாளையம் செல்வதற்காக வசிஷ்ட நதியின் குறுக்கே மேம்பால கட்டுமான பணி நடைபெறும் ஈச்சிலி மரம் அருகே வசிஷ்ட நதியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக அவ்வழியாகச் சென்றவர்கள் அளித்த தகவலின் பெயரில் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் வசிஷ்ட நதியில் மிதந்த உடலை மீட்டனர்.
அப்பகுதி மக்கள் உடலை பார்த்த போது காணாமல் போன ஸ்ரீதரன் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது வசிஷ்ட நதியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.அய்யனார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் ஸ்ரீதரன். இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.
- சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூரில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது கால்நடை சந்தை சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
- இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகை என்பதால் அதிகளவில் விற்பனைக்காக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இன ஆடுகள் என பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூரில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது கால்நடை சந்தை சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. மேலும்
சனிக்கிழமை நடைபெறும் கால்நடை சந்தையில் பல்வேறு பகுதிலிருந்தும் ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகை என்பதால் அதிகளவில் விற்பனைக்காக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இன ஆடுகள் என பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.
மேலும் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் ஆடுகளளை உள்ளூர், மட்டுமின்றி பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, மதுரை ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்தனர். மேலும் இன்று நடைபெற்ற கால்நடை சந்தையில் சுமார் 5000 ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் ஆடுகளின் விலை ரூ.3ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது சுமார் ரூ.3 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
60 கிலோ எடையுள்ள ஆடு ஒன்று 20ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 2 வாரமாகவே சேலம் நகர கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
- பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் நேற்று மாலை சேலம் மாநகரின் பல்வேறு இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சேலம்:
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 2 வாரமாகவே சேலம் நகர கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் நேற்று மாலை சேலம் மாநகரின் பல்வேறு இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
முதல் அக்ரகாரம், 2-வது அக்ரகாரம், புதிய பஸ் நிலையம், பேர்லேண்ட்ஸ், 5-ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள் மற்றும் நகை கடைகள், இனிப்பு கடைகளில் கூட்டம் அைலமோதியது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இதே போல் சீலநா யக்கன்பட்டி, கொண்ட லாம்பட்டி, பெங்களூரு பைபாஸ் ரோடு பகுதிக ளிலும் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
அலைமோதிய கூட்டம்
தீபாவளி பண்டிகையை கொண்டாட சேலத்தில் வசிக்கும் வெளியூர் காரர்களும், வெளியூரில் வசிக்கும் சேலத்து காரர்களும் அதிகளவில் வந்ததால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து சென்ற அனைத்து பஸ்களும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இதனால் பஸ்சில் இடம் பிடிக்க பயணிகள் இடையே கடுமையான போட்டியும் நிலவியது. சிலர் பஸ் நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டு இடம் பிடித்தனர்.
இதே போல் சேலம் வழியாக சென்ற ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது. மேலும் ரெயில்களில் யாராவது பட்டாசு கொண்டு செல்கிறார்களா என்று போலீ சார் தீவிரமாக சோதனை நடத்தினர்.
பட்டாசு கடைகளில் கூட்டம்
இந்த ஆண்டு சேலத்தில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், இரும்பாலை பகுதியில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளிலும் சிறுவர்கள் அதிகளவில் திரண்டு தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி சென்றனர்.
கண்காணிப்பு
பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருப்பதால் போலீசார் உயர் கோபுரம் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். ேமலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் யாராவது பொதுமக்களிடம் கை வரிசை காட்டுகிறார்களா, என்றும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதே போல் புறநகர் பகுதிகளான மேட்டூர், கொளத்தூர், ஓமலூர், வாழப்பாடி, ஆத்தூர், தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சேலம் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகையை யொட்டி கடைவீதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் கூட்டம் அலை மோதியது. மேலும் நாமக்கல்லில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட சென்றனர். இதனால் பஸ் நிலையத்திலும் கூட்டம் நிலவியது.
இதே போல் குமார பாளையம், பள்ளி பாளைம், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 700 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சேலத்தில் நடக்கிறது.
- தி.மு.க. அந்தந்த பகுதி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மாநில இளைஞரணி மாநாட்டிற்கு முன்னோட் டமாக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சேலத்தில் நடக்கிறது.
இதனை சிறப்பாக நடத்திட வேண்டி வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் மத்திய மாவட்ட, மாநகர, நிர்வாகிகள் பகுதி, ஒன்றியங்களுக்கு நேரில் வந்து அந்தந்த பகுதி ஒன்றியங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளோம்,
அதன்படி 14-ந் தேதி காலை 9.30 மணி பொன்னம்மாப்பேட்டை பகுதி, 10.30 மணி அரிசிபாளையம் பகுதி, 11.30 மணி அம்மாப்பேட்டை பகுதி, 12.30 கிச்சிப்பாளையம் பகுதி, மதியம் 1.30 மணி குகை பகுதி, 4.30 தாதகாப்பட்டி பகுதி, 5.30 மணி கொண்டலாம்பட்டி பகுதி, 6.30 மணி செவ்வாய்ப்பேட்டை பகுதி, 7.30 மணி குமாரசாமிப்பட்டி பகுதியிலும் நடக்கிறது.
15-ந் தேதி 9.30 மணி அஸ்தம்பட்டி பகுதி, 10.30 அழகாபுரம் பகுதி, 11.30 மணி மெய்யனூர் பகுதி, 12.30 மணி சூரமங்கலம் பகுதி, 1 மணி சேலம் வடக்கு ஒன்றியம், 3 மணி தாரமங்கலம் கிழக்கு மற்றும் ஓமலூர் தெற்கு ஒன்றியம், 4 மணி ஓமலூர் வடக்கு மற்றும் கிழக்கு ஒன்றியம், 5 மணி காடையாம்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் நடக்கிறது.
இதில் தி.மு.க. அந்தந்த பகுதி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
- மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.
- சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த 29 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது செல்போனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நீங்கள் மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.
அதற்கு அவர் நான் எந்த பார்சலும் அனுப்பவில்லை என தெரிவித்தார். மறுமுனையில் பேசியவர் நாங்கள் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி, உங்கள் பெயரில் தான் பார்சல் சென்றுள்ளது. அதனால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.27 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டினார்.
இதனால் பயந்து போன சாப்ட்வேர் என்ஜினீயர் 3 தவணைகளாக ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 348-ஐ அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் அனுப்பினார். தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியது.
இதனால் சந்தேகம் அடைந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது உத்தரபிரதேசத்தை சேர்ந்த மோசடி கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
- வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகள் பணத்தை பெற்றுகொண்டு பில் தொகை ஒப்புதல் கொடுப்பதாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 4 மணியளவில் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அலுவலகத்திலிருந்து காரில் புறப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரியின் வாகனத்தை நிறுத்தி உள்ளே அழைத்துச் சென்று அவரது அறை மற்றும் அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் சோதனை நடத்தினர்.
சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.32,500 கைப்பற்றப்பட்டது. இதனிடையே அலுவலர்கள் வைத்திருந்த ஆயிரம், 2 ரூபாய்க்கு கணக்கு இருந்ததால் அவர்களை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இரவு 12 மணி வரை சோதனைகள் தொடர்ந்தது. இதில் மொத்தமாக ரூ.32,500 மட்டுமே கிடைத்ததை தொடர்ந்து அனைவரும் சோதனை முடித்துக்கொண்டு திரும்பி சென்றனர். இந்த தொகை குறித்து அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 6 லட்சத்து 3500 ரூபாய் பணம் சிக்கிய நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகள் உஷாராக இருந்ததாக கூறப்படுகிறது. அடுத்த நாளே ஓமலூர் ஒன்றிய அலுவலகத்தில் சோதனை நடத்தியதால் பெரிதாக பணம் ஏதும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.






