search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for Rs.1 Crore"

    • ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.
    • கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் தள்ளுபடி விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப் பதாவது:-

    ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த வருடமும் தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள பொன்னி கூட்டுறவு பண்டகசாலை, என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலை, சுவர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை, இளம்பிள்ளை கூட்டுறவு பண்டகசாலை, காடை யாம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை ஆகியவற்றின் மூலம் சிவகாசியில் உள்ள அங்கீக ரிக்கப்பட்ட பட்டாசுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களி டமிருந்து பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    பொன்னி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.70 லட்சம், சேலம் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் ரூ.9 லட்சம், ஆத்தூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை சங்கம் மூலம் ரூ. 7.50 லட்சம், என்.ஜி.ஜி.ஓ கூட்டுறவு பண்டக சாலை மூலம் ரூ.4 லட்சம், சுவர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.6 லட்சம், இளம்பிள்ளை கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.2 லட்சம், காடையாம்பட்டி கூட்டுறவு பண்டகசாலை மூலம் ரூ.1.50 லட்சம் ஆக மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது.

    கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் தள்ளுபடி விலையில் தரமான பட்டாசுகள் விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர். இந்த பட்டாசு விற்பனையானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.
    • கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது/ தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாக திகழும் இந்த சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.

    இந்த சந்தையில் கர்நா டகா மற்றும் கேரளா மாநி லங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாம க்கல், கரூர், தாராபுரம், நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சத்தியமங்கலம், புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும் வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை வழக்கம் போல் சந்தை கூடியது. இந்த மாட்டுசந்தையில் ஜெர்சி மாடுகள் ரூ.55 ஆயிரத்துக்கும், சிந்து மாடுகள் ரூ.56 ஆயிரத்து க்கும், எருமை மாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விற்பனை யானது.

    இதில் கலப்பின மாடுகள் ரூ.50 ஆயிரத்து க்கும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை யானது. மேலும் வெள்ளாடு ரூ.7 ஆயிரம் வரையும், மற்றும் செம்மறி ஆடுகள் ரூ.6 ஆயிரம் வரையும் விற்பனை செய்ய ப்பட்டது.

    இதில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்

    • பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 23 லட்சம் ஆகும்.

    பெருந்துறை:

    பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 3,366 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் முதல் தர கொப்பரைகள் 1,902 மூட்டைகள் வரப் பெற்றிருந்தன.

    இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 76.59-க்கும், அதிகபட்சமாக ரூ.80.19-க்கும் விற்பனையாகின. 2-ம் தர கொப்பரைகள் 1,464 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 56.29-க்கும், அதிகபட்சமாக ரூ. 75.50-க்கும் விற்பனையாகின. மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ. 1 கோடியே 23 லட்சம் ஆகும்.

    ×