search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியம்பட்டி வார சந்தையில் கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை
    X

    புளியம்பட்டி வார சந்தையில் கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை

    • ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.
    • கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது/ தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாக திகழும் இந்த சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.

    இந்த சந்தையில் கர்நா டகா மற்றும் கேரளா மாநி லங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாம க்கல், கரூர், தாராபுரம், நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சத்தியமங்கலம், புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும் வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை வழக்கம் போல் சந்தை கூடியது. இந்த மாட்டுசந்தையில் ஜெர்சி மாடுகள் ரூ.55 ஆயிரத்துக்கும், சிந்து மாடுகள் ரூ.56 ஆயிரத்து க்கும், எருமை மாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விற்பனை யானது.

    இதில் கலப்பின மாடுகள் ரூ.50 ஆயிரத்து க்கும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை யானது. மேலும் வெள்ளாடு ரூ.7 ஆயிரம் வரையும், மற்றும் செம்மறி ஆடுகள் ரூ.6 ஆயிரம் வரையும் விற்பனை செய்ய ப்பட்டது.

    இதில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்

    Next Story
    ×