search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cattle sold at"

    • பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை கூடியது.
    • மொத்தம் ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் கால்நடை சந்தை கூடியது. இதற்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன் பட்டி, தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம், நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் ஆகிய ஊர்களில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 80, இதேயின கிடாரிக் கன்றுகள் 100,

    சிந்து மற்றும் ஜெர்சி இனக் கறவை மாடுகள் 100, இதேயின கிடாரிக்கன்றுகள் 120 வந்திருந்தன. கடந்த வாரத்தை விட இந்த வாரம் வாரத்து கணசமாக குறைந்து காணப்பட்டது.

    விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும், இதேயின கிடாரிக்கன்று ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும் விலை போனது.

    சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.28ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும். இதேயின கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

    கடந்த வாரத்தை விட மாடுகள் மற்றும் கன்றுகளின் விலை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை குறைந்து காணப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சீனாபுரத்தில் கால்நடைச்சந்தை கூடியது.
    • ரூ.1 கோடி வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் கால்நடைச்சந்தை கூடியது.

    இதற்கு சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 90-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 120-ம் விற்பனைக்கு வந்திருந்தன.

    இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரிக்கன்றுகள் 150-ம், இது தவிர எருமைக்கன்றுகள் 10-ம் கொண்டு வரப்பட்டிருந்தன.

    இந்த சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்து இருந்த போதிலும், தீவன பற்றாக்குறை காரணமாக மாடுகள் மற்றும் கன்றுகள் கணிசமாக விலை குறைந்து விற்பனையானது.

    விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும்,

    சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும்,

    எருமைக் கன்றுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் விலைபோனது. சந்தையில் மாடுகள் மற்றும் கன்றுகளின் விற்பனை ரூ.1 கோடி வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • புஞ்சை புளியம்பட்டியில் வாரச்சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.
    • ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் வாரச்சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது. இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், தாராபுரம் மற்றும் புளியம்பட்டி சுற்று பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும் வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களில் கூடிய மாட்டு சந்தையில் ஜெர்சி மாடுகள் ரூ.52 ஆயிரத்துக்கும், சிந்து இன மாடுகள் ரூ.42 ஆயிரத்துக்கும், எருமைகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்றது.

    இதில் நாட்டு மாடுகள் ரூ.57 ஆயிரத்துக்கும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது.

    அதேபோல் வெள்ளாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் மற்றும் செம்மறியாடுகள் ரூ.12ஆயிரம் வரையும் விற்றது.

    இதில் மொத்தம் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானதாக என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று நடைபெறும்.
    • கால்நடைகள் விற்பனை ரூ.75 லட்சம் ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழன் அன்று நடைபெறும். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், கோவை மற்றும் புளியம்பட்டி சுற்று பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் இந்த வாரம் கூடிய மாட்டுச்சந்தையில் ஜெர்சி இன மாடுகள் ரூ.52 ஆயிரத்துக்கும், சிந்து இன மாடுகள் ரூ.42 ஆயிரத்துக்கும், எருமைகள் ரூ.15 முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.

    இதில் நாட்டு மாடுகள் ரூ.57 ஆயிரம் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. எடைக்கேற்ப வெள்ளாடு ரூ.15 ஆயிரம் மற்றும் செம்மறியாடு ரூ.12ஆயிரம் வரை விற்றது.

    இதில் மொத்தம் கால்நடைகள் விற்பனை ரூ.75 லட்சம் ஆனது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.
    • கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது/ தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாக திகழும் இந்த சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.

    இந்த சந்தையில் கர்நா டகா மற்றும் கேரளா மாநி லங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாம க்கல், கரூர், தாராபுரம், நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சத்தியமங்கலம், புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும் வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை வழக்கம் போல் சந்தை கூடியது. இந்த மாட்டுசந்தையில் ஜெர்சி மாடுகள் ரூ.55 ஆயிரத்துக்கும், சிந்து மாடுகள் ரூ.56 ஆயிரத்து க்கும், எருமை மாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விற்பனை யானது.

    இதில் கலப்பின மாடுகள் ரூ.50 ஆயிரத்து க்கும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை யானது. மேலும் வெள்ளாடு ரூ.7 ஆயிரம் வரையும், மற்றும் செம்மறி ஆடுகள் ரூ.6 ஆயிரம் வரையும் விற்பனை செய்ய ப்பட்டது.

    இதில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்

    ×